Advertisment

தாலி இல்லாமல் வாழ போகும் தீபா: போலி நகை வெளிச்சத்திற்கு வருமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழின் சந்தியா ராகம் மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Santhiya ragam and Kra

சந்தியா ராகம் - கார்த்திகை தீபம்

தீபா கழுத்தில் திரும்பவும் தாலி ஏறாது.. அதிர்ச்சி கொடுத்த ஜோசியர்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியை டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வர ரம்யா பல்பு வாங்கிய நிலையில் இன்று, ரம்யாவுக்கு வெங்கையா போன் செய்து என்னம்மா நீங்க கார்த்திக்கிட்ட மாத்தி பொய் சொல்ல சொல்லிடீங்க, இதனால் எந்த பிரச்னையும் வராதா என்று பேசி கொண்டிருக்க ரம்யா அவனிடம் பேசி விட்டு திரும்பும் போது அங்கே மைதிலி நிற்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

மேலும் மைதிலி யாரிடம் பேசிட்டு இருந்த என்று கேள்வி கேட்க ஆபிஸ் கால் என்று சொல்லி சமாளித்து அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள், அடுத்து அபிராமி தீபாவுடன் கோவிலுக்கு வந்து தாலியை கொடுத்து தனக்காக தீபா தாலியை கழட்டிய விஷயத்தை சொல்லி மறு தாலி கட்ட பூஜை செய்ய வேண்டும் என்று பேசுகிறாள். அய்யரும் மாமியாருக்கு தாலியை கழட்டுறதை எல்லாம் நான் பார்த்ததே இல்ல என்று தீபாவை பாராட்டுகிறார்.

மறுபக்கம் தர்மலிங்கம் தீபா ஜாதகத்தை கொடுத்து ஜோசியர் ஒருவரிடம் நேரம் எப்படி இருக்கு என்று கேட்க அவர் இந்த பொண்ணு கழுத்தில் இருந்து தாலி இறங்கினா அது திரும்பவும் ஏறவே ஏறாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார், தர்மலிங்க என்ன சாமி சொல்றீங்க என்று அதிர்ச்சியாக ஆமாம், நீங்க என்ன தான் முயற்சி செய்தாலும் இந்த பொண்ணு கழுத்தில் இறங்கிய தாலி திரும்பவும் ஏறாது. அப்படியே ஏறினா இவளோட மாமியார் உயிருக்கு ஆபத்து வரும் என்று அதிர வைக்கிறார்.

தாலி இல்லனாலும் இந்த பொண்ணோட வாழ்க்கை நல்லா தான் இருக்கும், அதை அப்படியே விட்டுடுங்க என்று சொல்ல தர்மலிங்கம் திரும்பவும் தாலி ஏறுவதை பார்க்கணும் என்று ஆசையை சொல்ல ஜோசியர் ஒரு தேதியை குறித்து கொடுத்து முயற்சி பண்ணி பாருங்க, தாலி ஏறலனா திரும்பவும் என்னை வந்து பாருங்க என்று சொல்கிறார். அடுத்து கோவிலில் இருந்து ஜவுளி கடைக்கு வரும் அபிராமி தீபாவுக்கு பட்டு புடவை கார்த்திக்கு பட்டு வேட்டி சட்டையை எடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போலி நகையை தயார் செய்து சிக்கிய லிங்கம்.. மணி கேட்ட கேள்வி, நடந்தது என்ன?

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் போட்டோஷூட் நடத்திய போடோக்கள் வர அதை பார்த்து ரகுராம் ஜானகி பீல் செய்த நிலையில் இன்று, ரகுராம், ஜானகி ஆகியோர் கல்யாணத்திற்காக புடவை எடுக்க லிங்கம் வீட்டிற்கு கிளம்பி செல்ல மணி நானும் வருவேன் என்று அடம் பிடித்து கிளம்பி செல்கிறான். லிங்கம் வீடு முழுக்க சரக்கு பாட்டிலும் தம்மும் கிடக்க, அதை பார்த்து சாரு சத்தம் போட லிங்கமும் அவனது மனைவி தேனும் சுத்தம் செய்கின்றனர்.

இதற்கிடையில் லிங்கம் யாருக்கும் தெரியாமல் சரக்கை ஜூஸில் கலந்து ப்ரிட்ஜில் வைத்து விடுகிறான். அடுத்து கடன்காரன் வீட்டிற்கு வந்து வட்டியையும் கொடுக்கல, அசலையும் கொடுக்கல என்று சத்தம் போட லிங்கம் கல்யாணம் முடிந்ததும் பணத்தை கொடுத்து விடுவதாக சொல்ல நீ என்ன பொண்ணா எடுக்கிற சீர் வரத்துக்கு பொண்ணை கொடுத்தா எப்படி பணம் வரும் என்று கேள்வி கேட்க ரகுராம் கொடுத்து உதவுவார் என்று சமாளித்து அனுப்பி வைக்கிறான்.

பிறகு ரகுராம் குடும்பத்தினர் வீட்டிற்கு வர அந்த நேரம் பார்த்து ஒருவன் போலி நகையை கொண்டு வந்து கொடுக்க அதை பார்த்து மணி என்ன போலி நகை மாதிரி இருக்கு என்று கேள்வி கேட்கிறார். இதெல்லாம் வெளிநாட்டு நகை, 100 சவரன் என்று சமாளிக்கிறான் லிங்கம். இவர்களுடன் சீனு வீட்டிற்கு வராத நிலையில் சாரு அவனுக்கு போன் போட போன் எடுக்காமல் இருக்க பிறகு வீட்டிற்கு போன் போட தனம் போன் எடுத்து மாமா மாயாவோட வெளியே போய் இருக்கு என்று சொல்கிறாள்.

வீட்டிற்கு வந்ததும் வர சொல்லி போனை வைக்க அவள் மாயாவுக்கு தகவல் சொல்ல மாயா சீனுவை ஷாரு வீட்டிற்கு போக சொல்கிறாள். ஆனால் சீனு நீயும் வந்தால் தான் போவேன் என்று அடம் பிடிக்கிறான். இதனால் வேறு வழியின்றி மாயாவும் கிளம்பி செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment