Advertisment

அடுத்தவர் கணவனை அடைய முயற்சி... சொத்துக்களை அபகரிக்க சூழ்ச்சி : இன்னும் எத்தனை நாளைக்கு இதே கதை?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Zee tamil anna KD St

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாண்டியம்மா கழுத்தில் அருவா.. மரண பயத்தை காட்டிய இசக்கி

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகமும் பரணியும் கிளினிக்கிற்கு கிளம்ப முத்துப்பாண்டி துப்பாக்கியை காணவில்லை என சண்முகத்தை பார்க்க வந்து கொண்டிருந்த நிலையில் இன்று, பரணி பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது காதலோடு அவனை நெருங்கி நெருங்கி செல்ல, சண்முகம் கடுப்பாகிறான். ஒழுங்கா உட்கார்ந்து வராதா இருந்தா வா இல்லனா நான் வரல என்று வண்டியை நிறுத்தி விட பரணி சரி ஒழுங்கா வரேன் என்று சொல்ல இருவரும் கிளம்பி செல்கின்றனர்.

அப்போது எதிரே முத்துப்பாண்டி மோதுவது போல் வந்து நிற்கிறான். சண்முகத்திற்கும் அவனுக்கும் இடையே சண்டை உருவாக முத்துப்பாண்டி நீ தான் ஆளை வச்சி அடிச்சி என் துப்பாக்கியை திருடுனா என்று கேட்க பரணி அவன் அடிக்கணும்னு நினைச்சா ஆள் எல்லாம் தேவையே இல்ல, அவனே அடிச்சி தூக்கி போட்டு போயிட்டே இருப்பான் என்று சொல்கிறாள். பின்னாடியே வந்த சௌந்தரபாண்டி பிரச்னை வேண்டாம் என்று சொல்லி முத்துபாண்டியை அழைத்து செல்கிறார்.

இங்கே வீட்டில் சாப்பாடு சரியில்லை என்று இசக்கியை கூப்பிட்டு பாண்டியம்மா ஓடுகாளிக்கு பிறந்தவளே என்று திட்ட, அம்மாவை பத்தி தப்பா பேசியதால் ஆவேசம் கொள்ளும் இசக்கி அரிவாளை பாண்டியம்மா கழுத்தில் வைத்து மரண பயத்தை காட்டுகிறாள். இங்கே வீட்டில் சாப்பாட்டில் காரம் கம்மியா இருக்க சண்முகம் காரணம் கேட்க பரணி மிளகாய் தூள் காலி என்று சொல்கிறாள். இதை கேட்ட சண்முகம் இப்போ தானே வாங்கி தந்தேன் என்று சொல்கிறான்.

பாண்டியம்மா தனது ரூமில் உள்ள பாத்ரூமை கழுவ சொல்ல இசக்கி உன் பாத்ரூமை நீ தான் கழுவனும் என்று கழுவ வைக்கிறாள். வீட்டுக்கு வந்த முத்துப்பாண்டி, சௌந்தரபாண்டியிடம் சனியன் விஷயத்தை சொல்லி கூட்டி போக பாண்டியம்மா பாத்ரூம் கழுவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்து கனியால் சண்முகத்துக்கு முத்துபாண்டியை அடித்தது இவங்க தான் என்று தெரிய வர என் தங்கச்சிங்க இப்படி தான் இருக்கனும் என்று சந்தோசப்படுகிறான்.

பிறகு துப்பாக்கி குறித்து கேட்க அது எங்களுக்கு தெரியாது என்று சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனந்துக்கு கல்யாணம்.. நாள் குறிக்க வரும் ரியா, அபிராமி குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அருணுக்கும் கார்த்திக்கும் இடையே பிரச்சனை வெடித்த நிலையில் இன்று, அருண் வீட்டை விட்டு வெளியேறுவதாக சொல்ல கார்த்திக் ஒரு வாரத்தில் இதை பண்ணது யாருனு கண்டுபிடிக்கிறேன் என்று அருணை தடுத்து நிறுத்துகிறான், இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் நாம பிளான் பண்ண மாதிரியே நடந்துடுச்சி, இதை வச்சே அந்த தீபாவை வெளியே துரத்தணும் என்று பிளான் போடுகின்றனர்.

அதனை தொடர்ந்து தீபா மூலமாக மைதிலிக்கு விஷயம் தெரிய வருகிறது, உடனே அவள் ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு ராஜேஸ்வரியிடம் போனை கொடுக்க சொல்லி அவளை கண்டபடி திட்டி போனை வைக்கிறாள். கார்த்திக் அருணை சென்று சந்தித்து பிரச்சனையால் அம்மா சாப்பிடாமல் இருக்காங்க என்று சொல்ல அருண் அபிராமியை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறான்.

மறுப்பக்கம் ஆனந்த் ரியா வீட்டில் இருக்க திடீரென யாரோ கதவை தட்டுகின்றனர். ஆனந்த் கதவை திறக்க போலீஸ் நின்று கொண்டிருக்கிறது, என்ன விஷயம் என்று விசாரிக்க, பக்கத்து வீட்டில் ஒரு திருட்டு சம்பவம் நடந்திருக்கு, அதற்காக இன்வெஸ்டிகேஷன் செய்ய வந்திருக்கோம் என்று சொல்லி நீங்க யார் என்று விசாரிக்கின்றனர்.  ஆனந்த் இவங்க கணவரை விவாகரத்து பண்ணவங்க, நான் இவங்க ப்ரண்ட். பார்த்துட்டு போக வந்ததாக சொல்ல போலீஸ் ரியாவை ஒரு மாதிரி பார்த்து விட்டு கிளம்பி செல்கின்றனர்.

அதன் பிறகு ரியா அவங்க பார்வையே சரியில்ல, இதுக்காக தான் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னேன் என்று சொல்லி பீல் பண்ண ஆனந்த் சீக்கிரம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறான். பிறகு ரியா வெளியே வந்து அந்த போலீசுக்கு பணத்தை கொடுத்து நன்றி சொல்ல இது அனைத்தும் அவளோட செட்டப் என்று தெரிய வருகிறது.  இதனை தொடர்ந்து தீபாவும் அபிராமியும் கோவிலில் விளக்கு போட வருகின்றனர்.

இந்த நேரம் பார்த்து ரியாவும் அதே கோவிலுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிக்க வருகிறாள். இப்படியான நிலையில அடுத்து நடக்க போவது என்ன? இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வார்களா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நான்ஸி வைக்கும் செக்மேட்.. மீண்டும் ஜெயிலுக்கு போவாளா சீதா? 

சீதா ராமன், சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்ஸி தனக்கு கம்பெனியில் 25% ஷேர் இருப்பதாக சொல்லி ஷாக் கொடுத்த நிலையில் இன்று, சுபாஷ் மற்றும் துரை ஆகியோர் வீட்டிற்கு வந்து நான்ஸி தனக்கு ஷேர் இருப்பதாக சொல்லி ஷாக் கொடுத்ததை சொல்ல அதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ஆபிசுக்கு சென்று நான்ஸியிடம் பேச அவள் மீண்டும் தனக்கு ஷேர் இருக்கு என்னால் போக முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.

இதனை தொடர்ந்து சேது ஆடிட்டரை அழைத்து பேச அவர் ஆமாம் நான்ஸிக்கு ஷேர் இருக்கு, எதுவும் செய்ய முடியாது. வேணும்னா செட்டில்மென்ட் பேசி பாருங்க என்று சொல்கிறாள், இதனையடுத்து நான்ஸியிடம் வந்து செட்டில்மென்ட் பேச அவள் பணம் எதுவும் தேவையில்லை என்று சொல்கிறாள்.  ஆனால் சீதா மகாவை கொன்ற குற்றத்திற்காக ஜெயிலுக்கு போக வேண்டும் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.

பிறகு வீட்டில் சீதாவும் மீராவும் கோலம் போட்டு கொண்டிருக்க அங்கு வரும் நான்ஸி அதனை தட்டி விட்டு ப்ரியாவையும் பிடித்து திட்டுகிறாள். இதனால் அர்ச்சனா நான்சியிடம் சத்தம் போட நான்ஸி அர்ச்சனாவை மிரட்டுகிறாள்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment