Advertisment

அண்ணன் மீது புகார் கொடுத்த தங்கை... மருமகளை விரட்ட நினைக்கும் மாமியார் : அடுத்து என்ன?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், மற்றும் சீதாராமன் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன?

author-image
WebDesk
New Update
Anna Seriasl

அண்ணா சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இசக்கியை பிடித்து தள்ளிய முத்துப்பாண்டி.. பரணி கொடுத்த அதிர்ச்சி 

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் டிஎஸ்பி முத்துப்பாண்டிக்கு துப்பாக்கியை கண்டுபிடிக்க இரண்டு நாள் டைம் கொடுத்த நிலையில் இன்று, முத்துப்பாண்டி டிஎஸ்பி திட்டிய கடுப்பில் வீட்டுக்கு வர இசக்கி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறார். என்ன இது என்று கேட்க வெளியில போயிட்டு வந்தீங்க அதான் தண்ணி என்று சொல்லிக் கொடுக்க என்ன ஆள் வச்சு அடிச்சு துப்பாக்கியை திருடியது உன் அண்ணன் தான் அவன ஒழுங்கு மரியாதையா துப்பாக்கி கொடுக்க சொல்லு என்று சொல்கிறான்.

உடனே இசக்கி ஆறடி வளர்ந்து இருக்கீங்க உங்களோட பொருளை நீங்க பார்த்துக்க மாட்டீங்களா? மத்தவங்க மேல பழி போடாதீங்க என்று சொல்ல, பாண்டியம்மா ஒன்னும் இல்லாம வீட்டுக்கு வந்தவளுக்கு பேச்சை பாரு என்று அவமானப்படுத்தி பேச இருவருக்கும் வாக்குவாதம் நிர்வாக முத்துப்பாண்டி இசக்கி பிடித்து தள்ளிவிட அவள் சுவற்றில் மோதி கீழே விழுகிறாள்.  இதனால் இசக்கிக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்படுகிறது.

மறுபக்கம் பரணி ஒரு சின்ன பையனுக்கு ஊசி போட போக அவன் பயப்பட சண்முகம் முகாமில் ஊசி போடப் போகும்போது பயந்த விஷயத்தை நினைத்து பார்க்கிறாள். இந்த நேரம் பார்த்து பாக்கியம் பரணிக்கு போன் போட்டு என்ன விஷயம் என்று சொல்லாமல் நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வாய் என்று சொல்லி போ பரணியின் வீட்டுக்கு போக அங்கு இசக்கி ரத்தம் சொட்ட தின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

முத்துப்பாண்டி செய்த வேலை தான் என்பதை அறியும் பரணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போவதாக சொல்லி அங்கிருந்து கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கண்ணீருடன் தீபா, கார்த்திக் கொடுத்த மோட்டிவேஷன்.. ஹாஸ்பிடலில் தர்மலிங்கம்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பேப்பரில் நியூஸை பார்த்து அபிராமி பயங்கர கடுப்பாகிய நிலையில் இன்று, கார்த்திக் தீபா மேல தப்பு இருக்க வாய்ப்பில்ல, அவங்க நடந்தது எல்லாத்தையும் என்கிட்டே சொன்னாங்க. ரக்சன் டிராப் பண்ண தான் வந்தாரு என்று தீபாவுக்கு ஆதரவாக பேச அபிராமி ஜோசியர் சொன்னதை நினைத்து பார்த்து எதுவும் பேசாமல் அமைதியாகி விடுகிறார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் சேர்ந்து அபிராமியை ஏற்றி விட அபிராமி இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்க வேலையை மட்டும் பாருங்க என்று திட்டி விடுகிறாள்.

தீபாவுக்கு எதிரா கொளுத்தி போடுறது தான் உங்க வேலையா என்று கோபப்படுகிறாள். மறுபக்கம் தீபா ரூமுக்குள் எனக்கு இந்த பாட்டும் வேணா, புகழும் வேண்டா என்றும் கண்ணீர் விட்டு அழ கார்த்திக் இதெல்லாம் நீங்க பாட கூடாதுனு நடக்குற சதி, இதற்கெல்லாம் கவலை பட்டு உட்கார கூடாது. நீங்க பாடணும், உங்க பாட்டால் ஜெயித்து காட்டணும் என மோட்டிவேஷனலாக பேச தீபா கடைசியாக பாடுறேன் என்று சம்மதம் சொல்கிறாள்.

மறுபக்கம் தர்மலிங்கம் உடம்பு முடியாமல் ஹாஸ்பிடல் வர அவருக்கு மைல்டு அட்டாக் என்பது தெரிய வருகிறது, டாக்டர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்ல தர்மலிங்கம் இப்போதைக்கு பணம் இல்ல, 4 மாசம் கழிச்சி ஆபரேஷன் செய்துகிறேன். இப்போதைக்கு மருந்து மாத்திரை மட்டும் எழுதி கொடுக்க சொல்கிறார்.

அடுத்து ஆனந்த் போனை ஆன் பண்ண ரியா 150 முறை போன் செய்திருக்கும் விஷயம் தெரிய வருகிறது. மேலும் ஒரு புது நம்பரில் இருந்து போன் வர ஆனந்த் எடுத்து பேச ரியா சூசைட் அட்டென்ட் செய்து ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்ல ஆனந்த் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நான்ஸி வைத்த செக்மேட்.. தாலியை கழட்டுவாளா சீதா?

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் கிளைன்ட் இருவர் வந்து இன்னும் 1 வாரத்தில் நாங்க கொடுத்த ஆர்டரை முடித்து கொடுக்கணும் என்று சொல்லிய நிலையில் இன்று, சீதா நான்சியிடம் சென்று ஆர்டரை முடிக்க உதவி கேட்க உனக்கு இந்த குடும்பம் முக்கியம்னா தாலியை கழட்டி வச்சிட்டு ராமை பிரிந்து போ எல்லா பிரச்சனையும் நான் தீர்த்து வைக்கிறேன் என்று செக்மேட் வைக்கிறாள்.

இதனையடுத்து சீதா ரூமுக்குள் வருத்தமாக இருக்க ராம் நீ எதுக்கு நான்ஸி கிட்ட போய் பேசுன என்று கோபப்பட சீதா இது எனக்கும் நான்ஸிக்கும் இருக்க பிரச்னை, நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறாள். அதன் பிறகு அர்ச்சனாவும் சுபாஷும் நான்ஸியை சந்தித்து பேசுகின்றனர். நீங்க அந்த சீதா ஜெயிலுக்கு போக உதவி பண்ணுங்க என்னுடைய 25% ஷேரை உங்களுக்கு எழுதி கொடுத்துடுறேன் என்று சொல்கிறாள். அவர்களும் ஓகே என்று சம்மதிக்கின்றனர்.

மறுநாள் காலையில் சீதா நான்சியிடம் பேச கூப்பிட சுபாஷ் அர்ச்சனா நீ இங்கேயே இரு, முதல்ல நாங்க போய் பேசுறோம் அப்புறம் நீ வா என்று வெளியே வருகின்றனர். சீதா நான்ஸியிடம் பேசணும் என்று சொல்ல நான்ஸி வெளியே வந்து என்ன முடிவு எடுத்திருக்க என்று கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? குடும்பத்திற்காக சீதா எடுக்க போகும் முடிவு என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment