Advertisment

ஸ்கூலில் வெடித்த துப்பாக்கி... கம்பெனியில் வந்த பவர்கட் : யாருக்கு வெற்றி? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆ.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil anna KD St

ஜீ தமிழ் சீரியல்கள்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆ.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

கார்த்தியின் பிளானுக்கு வந்த சிக்கல்.. கண்ணாமூச்சி காட்டும் ராஜேஸ்வரி

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் நியூஸ் எடிட்டர் ரவியிடம் பேசி வீட்டிற்கு வரவைத்து உண்மையை சொல்ல வைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று, கார்த்தியின் பிளானை அறிந்த ராஜேஸ்வரி ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல நீ மாட்டிக்க போற மா என்று சொல்ல அவன் கில்லாடினா நான் அவனுக்கு மேல, நான் பண்ண போறதை மட்டும் பாரு என்று சொல்லி போனை வைக்கிறாள்.

கார்த்திக் வீட்டிற்கு வந்து நியூஸ் எடிட்டர் வந்து உண்மையை சொல்லுவான் என்று காத்திருக்க நேரம் ஆகி கொண்டே போகிறது, நியூஸ் எடிட்டர் வராத காரணத்தினால் ராஜேஸ்வரி என்ன பா கார்த்திக் எதையோ நிரூபிக்க போறேனு சொன்ன, இப்போ ஒருத்தனையும் காணவில்லை என்று வம்பிழுக்கிறாள் ராஜேஸ்வரி. யார் கிட்ட என்ன பேசுறோம்னு பார்த்து பேசு என்று கார்த்திக்கை எச்சரிக்கிறாள்.

இதையடுத்து கார்த்திக் நியூஸ் எடிட்டர் கண்டிப்பா வருவாரு எனக்கு 5 மணி வரைக்கும் டைம் கொடுங்க என்று சொல்லி விட்டு நேராக ரவி வீட்டிற்கு கிளம்பி வர அவரது மனைவி அவர் காலையிலேயே கிளம்பிட்டாரே அண்ணா, இன்னும் வரலையா என்று கேட்க கார்த்திக் எதையும் சொல்லாமல் நான் பார்த்துக்கறேன் என்று சமாளித்து வெளியே வருகிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? ரவியை கண்டுபிடித்து கார்த்திக் எப்படி உண்மையை உடைக்க போகிறான் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

துப்பாக்கியுடன் சிக்கி கொள்ளும் கனி.. முத்துப்பாண்டி கொடுத்த வார்னிங்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கனி வீட்டில் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து பார்த்து அண்ணனுக்கு தெரியாமல் ஏதாவது பண்ணனும் என்று முடிவெடுத்த நிலையில் இன்று, கனி யாருக்கும் தெரியாமல் துப்பாக்கியை எடுத்து ஸ்கூல் பேக்கில் வைத்து கொண்டு எங்கேயாவது வைத்து விடலாம் என்று பிளான் போடுகிறாள். இதனையடுத்து சண்முகத்துடன் அவள் ஸ்கூலுக்கு கிளம்புகிறான்.

அப்போது முத்துப்பாண்டி எதிரே வந்து நின்று அந்த துப்பாக்கியை நீ தான் எடுத்திருப்ப எனக்கு நல்லாவே தெரியும். அந்த துப்பாக்கி இல்லனா என் வேலையே போய்டும், அப்படி மட்டும் நடந்தா உன்னை சும்மா விட மாட்டேன் என்று வார்னிங் கொடுக்க கனிக்கு பயம் கூடி கொண்டே செல்கிறது. இதையடுத்து முத்துப்பாண்டி கிளம்பியதும் கனி பதற்றமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள்.

பிறகு பரணியும் வெளியே வர மூவரும் வண்டியில் கிளம்பி வருகின்றனர். கனியை ஸ்கூல் வாசலில் இறக்கி விட அவள் பையில் இருக்கும் துப்பாக்கியை குப்பை தொட்டியில் போட்டு விட முயற்சிக்க செக்யூரிட்டி வந்து விடுவதால் முடியாமல் போகிறது. கனி துப்பாக்கியுடன் ஸ்கூலுக்குள் இருப்பதால் பதற்றமாக இருக்க டீச்சருக்கு சந்தேகம் வந்து பேக்கை திறந்து பார்க்க துப்பாக்கி இருப்பதை பார்த்து இது எப்படி உன் கையில் வந்தது என்று கேட்கிறார்.

இருவரும் துப்பாக்கியை பிடித்து இழுக்க வெடித்து சிதற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

பூஜை கெட்டப்பில் சீதா போட்ட பிளான்.. நான்சிக்கு காத்திருக்கும் சிக்கல்

சீதா ராமன், சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவின் ஏற்பாட்டின் படி மகளிர் குழுவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று, வந்தவர்கள் எல்லாரும் மஞ்சள் புடவையில் வர சீதாவும் மஞ்சள் கலர் புடவையில் உட்கார்ந்து வீட்டில் பூஜை செய்ய எல்லாரும் எதுவும் புரியாமல் நிற்கின்றனர், பிறகு பஜனை பாட நான்சி இது என்ன பஜனை மடமா என்று கோபப்படுகிறாள். அதே சமயம் சீதாவின் நடவடிக்கையால் நான்சிக்கு ஏதோ சந்தேகமும் எழுகிறது.

இதனையடுத்து சீதா எல்லாரையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு கிளம்ப நான்சி தடுத்து நிறுத்தி அதான் இங்கயே எல்லா பூஜையும் பண்ணிட்டயே அப்புறம் கோவிலுக்கு எதுக்கு என்று கேட்க நாங்க போயிடு வருவோம் என்று சொல்லி கிளம்பி செல்கிறாள். இதனால் நான்சியின் சந்தேகம் அதிகமாகிறது.

வெளியே வந்த சீதா எல்லாரையும் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு அழைத்து வந்து சுத்தம் செய்து வேலையை தொடங்க தயாராக சேது அங்கு வருகிறார். சீதாவை பாராட்டி நமக்கு லாபம் கூட வேண்டாம், லாபத்தை இவர்களுக்கே கொடுத்திடலாம். நாம இந்த ஆர்டரை முடித்து கொடுத்தால் மட்டும் போதும் என்று முடிவெடுக்கிறாள்.

இதனை தொடர்ந்து நான்சி அர்ச்சனா மற்றும் சுபாஷை கூப்பிட்டு எனக்கு என்னமோ அவங்க கோவிலுக்கு போற மாதிரி தெரியவில்லை, ஏதோ பிளான் போட்டு இருக்கா என்று சுபாஷை தேட சொல்லி அனுப்பி வைக்கிறாள். மறுபக்கம் சீதா மகளிர் குழுவினரை வைத்து வேலைகளை செய்து கொண்டிருக்க திடீரென கரண்ட் கட் ஆகிறது.

ஜெனரேட்டர், பவர் பேக்கப் எதுவும் இல்லாத நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இவர்கள் திகைத்து நிற்கின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment