Advertisment

ஆற்றுக்கு நடுவில் பரிகாரம்: அக்காவை மாட்டிவிட்ட தம்பி; ஜீ தமிழ் சீரியலில் அடுத்து என்ன?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil serial143

நடு காட்டுக்குள் நடக்க போகும் பரிகாரம்.‌.மோசமடையும் அபிராமியின் உடல்நிலை

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா சோப்பில் பீரோ சாவியை அச்சு வைத்து மறைத்து வைத்திருந்ததை அருண் பார்த்து விட்ட நிலையில் இன்று, அபிராமியின் உடல்நிலை மோசமாகி விட அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்குவதாக டாக்டர்கள் அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதனால் குடும்பத்தினர் எல்லோரும் கவலையடைகின்றனர்.

மறுபக்கம் தீபாவை தீர்த்து கட்ட ரம்யா ஏற்பாடு செய்திருந்த போலி சாமியார் பரிகாரம் செய்வதை பற்றி சொல்லி நடு காட்டுக்குள் ஓடும் ஆற்றில் இதற்கான பரிகாரத்தை செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்து உள்ளது. தீபா போலி சாமியார் சொன்னதையும் ரம்யாவின் நாடகத்தையும் உண்மை என நம்பி பரிகாரம் செய்ய வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மனோகரிக்கு வந்த மிரட்டல் போன்.. சுடரை கொல்ல துணிந்த ரவுடிகள்

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரூம் பாய் தவறவிட்ட போனை எடுத்து வாய்ஸ் சேஞ்சர் ஆப் மூலம் மனோகரியை மிரட்டிய நிலையில் இன்று, சுடர் நான் சொல்ற இடத்துக்கு பணத்தை எடுத்துட்டு வா என்று சொல்லி மிரட்ட மனோகரி போனை வைத்து விட்டு நம்மள மிரட்டுவது யாராக இருக்கும் என யோசிக்கிறாள். பிறகு அங்கு வந்த கனகவல்லி என்ன யோசனையில் இருக்க என்று கேட்க நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வருகிறேன் என்று பணத்துடன் கிளம்பி வருகிறாள்.

அப்போது ரூம் பாய் போன் போட்டு மனோகரிடம் உங்கள கேட்டு என்கிட்ட ஒருத்தர் வந்து இருந்தாங்க நான் எஸ்கேப் ஆகிட்டேன் என்று சொல்ல அப்போ உன் போன்ல இருந்து எனக்கு போன் பண்ணது யாரு என்று கேட்கிறாள். என் போன் மிஸ் ஆயிடுச்சு அந்த பொண்ணு தான் உங்களுக்கு போன் பண்ணி இருக்கா என்று சொல்ல மனோகரி ரவுடிக்கு போன் போட்டு அந்த பொண்ணு வர சொன்ன இடத்திற்குச் சென்று அவளை காலி பண்ணிடு என்று சொல்கிறாள்.

இதையடுத்து ரவுடிகள் அங்கு வர சுடர் நின்று கொண்டிருப்பதை பார்த்து ஷாக்காகி மனோகரிக்கு போன் செய்து அது இந்து தங்கச்சி சுடர் என்ற விஷயத்தை சொல்ல இன்னும் ஷாக் ஆகிறாள். இதையடுத்து ரவுடிகள் சுடரை கொல்ல துரத்த இதைப் பார்த்த இந்துமதி சுடரை காப்பாற்றுவதற்காக அவளது உடம்புக்குள் புகுந்து ரவுடிகளை அடித்து துரத்துகிறாள்.

பிறகு வீட்டுக்கு வந்த சுடர் மனோகரியை பார்த்து என்ன மனோகரி எப்படி இருக்க என்று கேட்க, மனோகரி இவ ஏன் இப்படி பேசிட்டு போறா என்று குழப்பம் அடைகிறாள். இந்துவின் ஆத்மாவுடன் வீட்டுக்குள் நுழைந்த சுடரை பார்த்து அஞ்சலி ட்ராயிங் பண்ணி இருக்கேன் வந்து எப்படி இருக்குனு சொல்லு என்று கூப்பிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாண்டியம்மாவை சிக்க வைத்த சௌந்தரபாண்டி.. நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் போலீஸ் சௌந்தரபாண்டி வீட்டில் சோதனையிட பாண்டியம்மா ரூமில் நகை பெட்டி கிடைத்த நிலையில் இன்று, பாண்டியம்மாவை போலீஸ் கைது செய்ய போகும் போது அவர் சௌந்தரபாண்டியை பார்த்து கடைசியில் என்னை மாட்டி விட்டுட்டியே டா என்று திட்டி விட்டு செல்கிறாள். மறுபக்கம் பரணியும் சண்முகமும் சௌந்தரபாண்டி தப்பிச்சிடாரே என்று வருத்தப்படுகின்றனர்.

அதனை தொடர்ந்து பாண்டியம்மாவை கோர்ட்டில் ஆஜர் படுத்த முடிவெடுத்த நிலையில் பரணி சண்முகம் பாண்டியம்மாவை சந்தித்து நீங்க உண்மையை சொல்லலைனா உங்களுக்கு தான் பெருசா தண்டனை கிடைக்கும், உங்க தம்பி தப்பிச்சிடுவாரு என்று சொல்ல பாண்டியம்மா உண்மையை சொல்ல முடிவெடுக்கிறாள். அடுத்ததாக பாண்டியம்மாவை கோர்ட்டில் ஆஜர் படுத்த அவள் உண்மையை சொல்ல தயாராகிறாள்.

சௌந்தரபாண்டி கோவில் நகைகளை பாண்டியம்மாவிடம் கொடுத்து போட்டு பார்க்க சொல்லி எடுத்த போட்டோவை காட்டி என் அக்கா தான் நகையை திருடி இருக்கா என்று கோர்த்து விடுகிறார். இதனால் நீதிமன்றம் பாண்டியம்மாவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை விதிக்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

New Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment