Advertisment

அங்கு மகா... இங்கு மாயா... டெரர் வில்லிகள் ஆதிக்கத்தில் ஜீ தமிழ் சீரியல்கள்

ஜீ தமிழின் அமுதாவும் அன்னலட்சுமியும் மற்றும் சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பது குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil AA SR

அமுதாவும் அன்னலட்சுமியும் - சீதா ராமன்

சேதுவால் ராமை தேடி வந்த மகா.. சீதா கொடுத்த அதிர்ச்சி 

Advertisment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி வரும்  சீதாராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராமை சந்தித்து விட்டு சென்ற சேது, ராம் வராமல் வீட்டுக்குள் வரமாட்டேன் என அடம்பிடித்து வீட்டிற்கு வெளியில் உட்கார்ந்து விடுகிறார். மகாலட்சுமி உங்கள விட என் மேல தானே அதிகமாக கோபமா இருக்கலாம் நான் கூப்பிட்டா எப்படி வருவான் என்று கேட்க எனக்கு அதெல்லாம் தெரியாது, ராம் வராம நான் வீட்டுக்குள்ள வரமாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்ககிறார் சேது.

இதனால் வேறு வழியில்லாமல் மகா மற்றும் அர்ச்சனா என இருவரும் ராம் சீதாவை தேடி செல்கின்றனர். கார் நுழையாத தெருவுக்குள் இறங்கி தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ராம் மற்றும் சீதாவை தேடுகின்றனர். இங்கே அர்ச்சனாவின் மகள் அதான் சித்தி போயிருக்காங்களே அவங்க கூட்டிட்டு வந்துடுவாங்க, நீங்க உள்ள வாங்க சாப்பிடுங்க என்று சொல்ல ராம் வராம எதுவும் செய்ய மாட்டேன் என உறுதியாக இருக்கிறார் சேது.

இதைத் தொடர்ந்து இங்கு சீதாவின் தையல் மிஷின் சத்தம் கேட்டு ஒரு வழியாக வீட்டை கண்டுபிடித்த மகாவை, சீதா அவர்களை உள்ளே கூப்பிட உள்ளே வரமாட்டோம் என மகா வெளியே காத்திருக்கின்றனர். ராம் எங்கே என கேட்ட மளிகை சாமான் வாங்க போய் இருப்பதாக சீதா சொல்ல மகா ஷாக் ஆகிறாள். சீதா கூப்பிட்ட போது இவர்கள் வர மறுத்த நிலையில் வெளியே சிலர் இவர்கள் இருவரையும் கிண்டல் அடிக்க அர்ச்சனா உள்ள போயிடுவது தான் நல்லது என உள்ளே வர சீதா மறைத்து பாய் போட்டு உட்கார வைக்கிறாள்.

மகாலட்சுமி இவள இங்கேயே விட்டுட்டு ராமை மட்டும் கூட்டிட்டு போக வேண்டியது தான் என கணக்கு போட, சீதா உங்க கணக்கு நிச்சயமா நடக்காது நீங்க எப்படி வேணா முயற்சி பண்ணி பாருங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். மகாலட்சுமி அதையும் பார்த்திடலாம் என சவால் விடுகிறாள். பிறகு ராம் வீட்டுக்கு வர சாதாரணமாக வீட்டில் உட்கார்ந்து இருக்காங்க என்று கேட்க சீதா சோபாவில் தான் உக்காருவாங்கலாம் என கோர்த்து விடுகிறாள்.

பிறகு மகா ராமு வீட்டுக்கு கூப்பிட ராம் நாங்கள் இரண்டு பேரும் இங்கு சந்தோஷமா தான் இருக்கோம் வர முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறான். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாயாவுக்கு மரண பயத்தை காட்டிய அன்னம்.. சிக்கி திணறும் செந்தில்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நேற்றைய எபிசோட்டில், வாத்தியார் செந்திலை பார்க்க வீட்டிற்கு வந்திருக்க அப்போது மாயா அமுதாவை கோர்த்து விடுவது போல் பேசிய நிலையில் இன்றைய எபிசோட்டில், வாத்தியார் வெளியே சென்றதும் அன்னலட்சுமி விளக்குமாறை எடுத்து மாயாவை அடிக்க போவைத்து மட்டுமில்லாமல் நீ என் மருமகளா என கோபப்படுகிறாள்.

அடுத்து மாயா அன்னலட்சுமியிடம் அமுதா கல்யாணம் ஆகலேன்னு ஸ்கூல்ல சொல்லிருக்கா இது நியாயமா என கேக்க, அன்னம் என் மருமக தியாகிடி என பாராட்டி பேசுகிறாள். அடுத்ததாக இரவு உமாவும் மாயாவும் தூங்கிக் கொண்டிருக்க, உமா ஏதோ சத்தம் வருவதாக மாயாவை எழுப்பி ஜன்னலை பார்க்க கருப்பு உருவம் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்து மாயாவை பார்க்க சொல்ல, மாயாவும் பார்த்து விட்டு அலறுகிறாள்.

பிறகு மாணிக்கமும் அன்னலட்சுமியும் கருப்பு போர்வை போர்த்திக் கொண்டு முகத்தில் மாஸ்க் மாட்டியபடி இருவரையும் பயமுறுத்தியது தெரிய வருகிறது. மாணிக்கம் வேஷத்தை கலைத்து விட்டு அமுதாவிடம் உன் மாமா ஆவியா வந்துருப்பாரும்மா என சொல்ல, மாயா இங்க பேய் இருக்கா என பயப்படுகிறாள். மாயாவும் உமாவும் மீண்டும் தூங்க செல்ல, மாணிக்கம் மீண்டும் வேஷமிட்டு பயமுறுத்துகின்றனர்.

மாயாவும், உமாவும் தூங்காமல் ஹாலில் பயத்துடன் அமர்ந்திருக்க, மாணிக்கம் அவர்களிடம் ஒழுங்கா வீட்டை விட்டு ஓடிருங்க என சொல்கிறார். அதனை தொடர்ந்து பள்ளிக் கூடத்தில் அமுதாவும் செந்திலும் கிளாஸ் முடிந்து ஒன்றாக நடந்து வர, மாயா டிபன் கேரியருடன் வர செந்தில் அவளிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க, ஹெ.எம் மகன் வருகிறார். செந்தில் அவன் முன் சமாளிக்க வாத்தியார் அமுதாவை இத்தனை நாள் ஸ்கூலுக்கு வராம எங்க போனீங்க என திட்டுகிறார்.

மாயா அவனை சாப்பிட அழைக்க செந்தில் வேறு வழி இல்லாமல் அவள் பின்னால் செல்கிறான். மாயா செந்திலுக்கு சாப்பாடு பரிமாற அதைப் பார்த்து அமுதா வேதனைப்பட அமுதாவுடன் படிக்கும் மாணவர்கள் என்ன பிரச்சனை ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என கேட்கின்றனர். இதனை தொடர்ந்து அமுதா மாணவர்களிடம் தனக்கு கல்யாணம் ஆகி விட்டதாகவும், செந்தில் தான் தன் கணவர் எனவும், மாயா தங்கள் வாழ்க்கையில் குறுக்கிடுவதாகவும் சொல்ல மாணவர்கள் நாங்க மாயாவை பார்த்துக்குறோம், நீங்க கவலைப்படாதீங்க என ஆறுதல் சொல்லிவிட்டு மாயா வர அவள் மேல் பெட்ஷீட்டை போர்த்தி அனைவரும் சேர்ந்து அடி வெளுத்தெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

New Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment