/indian-express-tamil/media/media_files/ILqRL5BdCd4DcotgjYBh.jpg)
அண்ணா சீரியல்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்க நித்யா ராம் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் பூ விலங்கு மோகன், ரோசரி, சத்யா, சுனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அம்மா காணாமல் போன நிலையில் rண்முகம் அண்ணனுக்கு அண்ணனாக அப்பாவுக்கு அப்பாவாக அம்மாவுக்கு அம்மாவாக இருந்து தனது குடும்பத்தை எப்படி கரை சேர்கிறார் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம். அயலி வெப் சீரிஸ் மூலமாக பாப்புலரான தாரா இந்த சீரியலில் சண்முகத்தின் நான்கு தங்கைகளில் ஒருவராக வீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
தற்போது அவருக்கு சந்தியா ராகம் சீரியலில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அவர் இந்த சீரியலில் விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக தொகுப்பாளினியாக வலம் வந்த தர்ஷு நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தவிர்க்க முடியாத காரணங்களாலும் தன்னுடைய குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாயத்தாலும் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் அண்ணா டீமை மிஸ் பண்ணுவேன் எனவும் வீரா கேரக்டரில் புதியதாக நடிக்க உள்ள நடிகைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், இதுவரை தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனால் இனி அவருக்கு பதிலாக நடிக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வீரா கேரக்டரில் நடிக்க புதிய நடிகைக்கான தேர்வும் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் விரைவில் யார் அந்த நடிகை என்பது தெரிய வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.