கர்ப்பமான சீதா.. கருவை கலைக்க முயற்சிக்கும் மகா : உச்சக்கட்ட வில்லத்தனம்

ஜீ தமிழின் சீதாரமன் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

ஜீ தமிழின் சீதாரமன் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Seetharaman

சீதாராமன் சீரியல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் ராம் ஐபிஎஸ் டிரெய்னிங் கிளம்ப மகா சீதாவை பழிவாங்க மந்திரவாதியை பார்க்க போவதாக சொல்ல கல்பனா கிண்டலடித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisment

மகா சீதாவை பழிவாங்க இது ஒன்னு தான் நல்ல வழி என்று சொல்லிவிட்டு மந்திரவாதியை பார்க்க வேண்டும் என்று பேசி கொண்டிருக்க மறுபக்கம் மந்திரவாதி ஒருவர் மகானு ஒருத்தங்க என்னை தேடுறாங்க, அவங்க கிட்ட இருந்து போன் வரும் என்று சொல்லி கொண்டிருக்க அதே போல் மகாவிடம் இருந்து போன் வருகிறது.

அதன் பிறகு மந்திரவாதி அப்பாயின்மென்ட் கொடுக்க சீதாவும் அர்ச்சனாவும் வந்து சந்தித்து சீதாவை பழி வாங்கணும் என்று சொல்கிறார்கள். மேலும் அவ வயித்துல ஒரு கரு வளருது என்று சாமியார் சொல்ல அதை மகா நம்ம மறுக்கிறார். ஆனாலும் என் மேலே நம்பிக்கை இல்லனா நீங்க கிளம்பி போங்க என்று கோபப்பட்டு துரத்தி விடுகிறார் சாமியார்..

வீட்டுக்கு வந்த பிறகு மகா நடந்த விஷயங்களை சொல்ல கல்பனா கிண்டலடிக்க சீதா திடீரென வாந்தி எடுக்க இவர்கள் ஷாக் ஆகின்றனர், என்னாச்சு என்று கேட்க சீதா தெரியல என்று சொல்கிறாள். இருந்தாலும் மகா சந்தேகப்பட்டு சீதாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறாள். வீட்டில் உள்ள எல்லாரும் கிளம்பி செல்கின்றனர். அப்போது சீதாவை பரிசோதனை செய்த டாக்டர் கர்ப்பமாக இருப்பதாக சொல்ல மகா ஷாக் ஆகிறாள்.

Advertisment
Advertisements

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: