New Update
/indian-express-tamil/media/media_files/Y0ClynhT6NQFQr0KRyCk.jpg)
சித்து - ஸ்ரேயா
சித்து - ஸ்ரேயா
அப்பாவின் பாசத்துக்கு ஏங்கும் வள்ளி..துணை நிற்கும் வேலனின் கதை - செப்டம்பர் 2 முதல் "வள்ளியின் வேலன்" புத்தம் புதிய மெகா தொடர்.!
வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.அந்த வகையில, தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருக்கும் ஜீ தமிழ் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களத்தில் இறக்கி வருகிறது. இதில் சமீபத்தில் புதியதாக ஒளிபரப்பை தொடங்கிய நினைத்தேன் வந்தாய், நெஞ்சத்தை கிள்ளாதே ஆகிய சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தொடர்ந்து மதிய வேளையில் டப்பிங் சீரியல்களை சமீபத்தில் ஒளிபரப்ப தொடங்கியது. இதனை தொடர்ந்து வரும் திங்கள் (செப்டம்பர் 2) முதல் வள்ளியின் வேலன் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது. திருமணம் என்ற சீரியலில் இணைந்து நடித்து பிரபலமான சித்து மற்றும் ஷ்ரேயா திருமணத்திற்கு மீண்டும் ஒன்றாக இணைந்து இந்த சீரியலில் நடிக்க உள்ளனர்.
அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் வள்ளிக்கு ஆறுதலாக துணையாக நிற்கும் வேலனின் கதை தான் இந்த வள்ளியின் வேலன். இது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இதுவரை 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நினைத்தேன் வந்தாய் சீரியல் இனி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இதுவரை 6 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியல் இனி 6:30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.