5 நாள் அமலாக்கத்துறை சோதனை நிறைவு : கோவை லாட்டரி அதிபர் வீட்டில் பல ஆவணங்கள் பறிமுதல்

கோவையில் கடந்த 5 நாட்களாக லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் நடந்து வந்த சோதனை இன்று காலை நிறைவடைந்தது

கோவையில் கடந்த 5 நாட்களாக லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் நடந்து வந்த சோதனை இன்று காலை நிறைவடைந்தது

author-image
WebDesk
New Update
Lottery

லாட்டரி அதிபர் வீட்டில் சோதனை

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரித் துறை சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைபற்றியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கோவையைசேர்ந்த லாட்டரி அதிபர்மார்டினுக்கு சொந்தமான 4" இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 12"ம் தேதி முதல்சோதனை நடத்தினர். இந்த சோதனை 5வதுநாளாக இன்று காலை வரை நீடித்தது. இந்த சோதனையின் போது வெள்ளகிணறு பகுதியில் உள்ள மார்டின் இல்லம் மற்றும் மார்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் கார்ப்பரேட் அலுவலகத்தில் இன்று காலை வரை சோதனை நீடித்தது.

மற்ற இரு இடங்களில் ஏற்கனவே நிறைவடைந்து இருந்த நிலையில் இன்று காலை 10.30 மணியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவடைந்தது. கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைபற்றி சென்றனர் என தகவல் கூறப்படுகின்றது.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: