Advertisment

நடிக்கவே முடியாதபடி முழு தடை விதிக்கப்படும் : நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
விஷாலுடன் மோதும் வாரிசு நடிகர்

நடிகர் விஷால்

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த நடிகர் விஷாலுக்கு நடிக்க முடியாதபடி தடை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தின் மூலம் சில படங்களை தயாரித்த நடிகர் விஷால் இந்த நிறுவனத்தின் பேரில் பைனான்சியர் அன்புச்செழியனின் போபுலம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ21.29 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்ட நிலையில், விஷால் கடனை திருப்பி செலுத்தும் வரை அவர் நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி நடிகர் விஷால் தான் நடித்த வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட முயன்றதாக லைகா நிறுவனம் விஷால் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரூ 15 கோடி டெப்பாசிட் செய்ய வேண்டும் என்று விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நிலையில், தொகையை செலுத்தாவிட்டால் இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் நடித்தபடங்கள் திரையரங்கு ஒடிடி என எதிலும் வெளியிட முடியாத படி தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கின் காரணமாக விஷால் நடிப்பில் தற்போது வெளியீட்டுக்கு தாயராக உள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி நேரில் ஆஜரான விஷால், சொத்து விபரங்கள் தாக்கல் செய்யாதது குறித்தும், 15 கோடி டெப்பாசிட் செய்ய தன்னிடம் போதுமான நிதி ஆதாரம் இல்லை என்றும் கூறியிருந்தர்.

ஆனால் தன்னிடம் நிதி ஆதாரம் இல்லை எனத் தெரிவித்த அதே நாளில் மினி ஸ்டூடியோ நிறுவனத்திடம் இருந்து ரூ1 கோடி பெறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இது நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவிப்பது குற்றம் என எச்சரித்தார். மேலும் லைகா தரப்பில், படங்களுக்கு 40 கோடி ஊதியம் பெற்றுள்ள விஷால், பணத்தை செலுத்தாவிட்டால் நடிப்பதை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் நீதிமன்றத்தில் விஷால் அளித்த வங்கி கணக்கில் முரணாக விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் அனைத்து படங்களையும் தடை விதிக்கலாமா, சொத்து விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு விஷால் தரப்பில் அந்த மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அப்போது மினி ஸ்டூடியோ தரப்பில், 60 கோடி செலவு செய்து மார்க் ஆண்டனி படத்தை தயாரித்து, 1400 ஸ்கிரீனில் வெளியாக உள்ளதால் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என விஷால் தரப்பில் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து நீதிபதி, மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதே சமயம், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது, நீதிமன்றத்தில் தவறான தகவல்களைத் தெரிவித்தது குறித்து பேசிய நீதிபதி, மேலும் நீதிமன்றத்தில் தவறான தகவல்கள் தெரிவித்தால், நடிக்கவே முடியாதப்படி முழு கடனையும் செலுத்தும் வரை தடை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vishal Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment