Advertisment

கனமழை எதிரொலி... நீலகிரியில் நிலச்சரிவு : மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13"வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் மற்றும் மண்சரிவு பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kunnur Mettupalaiyam

நீலகிரியில் நிலச்சரிவு

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மற்றும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரம் விழுந்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

Advertisment

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்க்களாக மழை பெய்து நிலையில் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்கிளில் நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13"வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் மற்றும் மண்சரிவு பாறைகள் விழுந்து அதிகாலை முதலே போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது இதனால் குன்னூர் மேட்டுபாளையம் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க்கின்றது.  இதனால் நான்கு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Nilgiris
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment