/indian-express-tamil/media/media_files/3YzCS0P12WOH0gQ87MDP.jpg)
நடிகை சரண்யா பொன்வண்ணன்
பார்க்கிங்கில் கார் நிறுத்துவது தொடர்பாக பக்கத்துவீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் அம்மா கேரக்டரில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரும் இவர், சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஸ்ரீதேவி என்பவருடன் சரண்யாவுக்கு பார்க்கிங் தொடர்பான அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாலை, சரண்யா தனது காரை ஸ்ரீதேவி வீட்டின் அருகில் நிறுத்தியிருந்த நிலையில், அவசரமாக காரை எடுக்க வந்த ஸ்ரீதேவி இரும்பு கேட்டை திறந்தபோது, சரண்யாவின் காரில் லேசாக உரசியுள்ளது. இதனால் கோபமான சரண்யா ஸ்ரீதேவியுடன் ஆவேசமாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகராறு குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஸ்ரீதேவி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதன் காரணமாக சரண்யா பொன்வண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி சி.சி.டி.வி காட்சிகளையும் காவல்துறையினரிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான 'பார்க்கிங்' என்ற திரைப்படத்தில், ஒரு கட்டிடத்தில் வாடகைக்கு இருக்கும் இருவருக்கு இடையே பார்க்கிங் இடத்துக்காக எழும் பிரச்சனை தான் இந்த படத்தின் கதை. அதேபோல் தான் தற்போது சரண்யா பொன்வண்ணன் வாழ்க்கையில் நடந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.