வயநாடு நிலச்சரிவு: ரூ2 கோடி நிவாரண நிதி வழங்கிய நடிகர் பிரபாஸ்!

வயநாடு நிலச்சரிவு சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரை பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

வயநாடு நிலச்சரிவு சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரை பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Saaho, Prabhas, Tamil Rockers, saaho review, movierulz

நடிகர் பிரபாஸ்

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி வழங்கி வரும் நிலையில், பிரபல தெலுங்கு நடிகராக பிரபாஸ் ரூ2 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல பகுதிகளில் அதிதீவிர கனமழை பெற்று வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரளாவில் முக்கிய பகுதிகளில் ஒன்றாக இருக்கும் வயநாடு பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்த சம்பவம் தென்னிந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ள நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட பலர் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் நிவாரணப்பணிக்காக, நடிகர் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், ஜோதிகா, மலையாள நடிகர் மம்முட்டி, நஸ்ரியா, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

மேலும் நிலச்சரிவு நடந்த பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மலையாள நடிகர் மோகன்லால், ரூ 3 கோடி நிதியுதலி அளித்துள்ளார். மேலும், முண்டக்கை பகுதியில் சேதமடைந்துள்ள பள்ளிக்கூடத்தை கட்டித்தருவதாகவும் கூறியுள்ளார்.  பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டிவரும் நிலையில், தேசிய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடிகை நிகிலா விமல் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment
Advertisements

மேலும் வயநாடு பகுதியில், 100 வீடுகள் கட்டித்தரப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தாராமையா அறிவித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது பிரபல தெலுங்கு நடகரான பிரபாஸ், வயநாடு நிலச்சரிவுக்கான நிவாரண நிதியாக ரூ2 கோடி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணத்தை கேரளா முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் அனுப்பி வைத்துள்ளார். மேலும் பல முக்கிய பிரபலங்கள் இந்த சம்பத்திற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Prabhas

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: