/tamil-ie/media/media_files/uploads/2019/08/Ajith.jpg)
தமிழின் முன்னணி நடிகரான நடிகர் அஜித், நடிப்பதோடு மற்ற பல விஷயங்களிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவரான அஜித், கோவையில் நடைபெற்று வரும் 45 வது தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துக் கொண்டுள்ளார். நேற்றிலிருந்து அஜித் துப்பாக்கி சுடும் ஃபோட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகின. இந்தப் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் 800 பேர் 5 பிரிவுகளில் கலந்துக் கொள்கின்றனர்.
இதில் நடிகர் அஜித்குமார் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைஃபிள் கிளப் சார்பாகக் கலந்துக் கொண்டிருக்கிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் நான்கு சுற்றுகளில் 400 பாயின்ட்களுக்கு 314 பாயின்ட்களைப் பெற்றுள்ளார் நடிகர் அஜித்.
இந்நிலையில் தமிழக துப்பாக்கி சுடுதலின் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், தமிழக சாம்பியன்ஷிப் போட்டியில் அடுத்த லெவலுக்கு முன்னேறியிருக்கிறார் அஜித். அதனால் இனி வரும் நாடகளில் அஜித்தின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாட்களாக இருக்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும், நேர்க்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகிறது. பாலிவுட்டில் வெளியாகி, மாபெரும் வெற்றிப்பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காக இது இயக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.