/tamil-ie/media/media_files/uploads/2019/02/thalapathy-63.jpg)
Thalapathy Vijay
சர்கார் படத்தை முடித்த கையோடு தனது அடுத்தப் படத்தில் கமிட்டானார்.
தெறி, மெர்சல் ஆகியப் படங்களைத் தொடர்ந்து, விஜய் நடிக்கும் புதிய படத்தையும் இயக்குநர் அட்லியே இயக்குகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை தளபதி 63 என்று குறிப்பிடுகிறார்கள் படக்குழுவினர்.
இதில் நயன்தாரா, கதிர், யோகிபாபு, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
விளையாட்டில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி, இந்தப்படம் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இதன் படபிடிப்பு சென்னையின் புற நகர் பகுதிகளில் நடந்து வந்தது. ஆனால் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரண்டு விடுவதால், திட்டமிட்டப்படி படபிடிப்பை நடத்த முடியவில்லையாம்.
எவ்வளவு சொன்னாலும் ரசிகர்கள் கேட்க மறுக்கிறார்களாம். அதனால் இனி சென்னையில் எடுக்க வேண்டிய மீத காட்சிகளை செட் அமைத்து எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். நேப்பியர் பாலத்தில் எடுக்க வேண்டிய காட்சி ஒன்றை பிரசாத் ஸ்டூடியோவில் செட் அமைத்து இரவு நேரம் ஷூட் பண்ணி முடித்திருக்கிறார்கள்.
ஆனால், செட் அமைப்பதால், படத்தின் பட்ஜெட் எகிறுகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இதற்கிடையே வெளிநாட்டில் படிக்கும் தன் மகனைப் பார்க்க பறந்திருக்கிறார் விஜய்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.