Advertisment

நடிகர் விஜய் சராசரி நபராக இருந்து இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக மாறியது எப்படி?

1992-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளை தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய்.

author-image
WebDesk
New Update
Actor vijay Anotomy

விஜய்யின் லியோ படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆங்கிலத்தில் படிக்க : ‘Thalapathy’ Vijay aka Leo: How the average kid in town became one of the biggest stars of Indian cinema

Advertisment

 தளபதி விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள லியோ படம் நாடு முழுவதும் எதிரொலித்து வரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அதிகபட்சமாக முன்பதிவுகளுடன், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த படம் முன்பதிவிலேயே சுமார் 34 கோடி வசூல் செய்து ரஜினியின் ஜெயிலர் படத்தின் (18 கோடி) சாதனையை முறியத்துள்ளது.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், லியோ படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா இல்லாமல், எந்த ஒரு விளம்பர நிகழ்வுகளும் இல்லாமல் முன்பதிவில் சாதித்துள்ளது என்று அடிக்கோடிட்டு காட்டும் அளவுக்கு தளபதி விஜய் சினிமா உலகின் அசைக்க முடியாத ஆளுமையான வளர்ந்துள்ளார்.

90-களின் தொடக்கத்தில் 1992-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளை தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய். அதற்கு முன்பு ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவருக்கு நாளைய தீர்ப்பு படம் நாயகன் அந்தஸ்தை கொடுத்து. அதன்பிறகு இந்த 31 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் பல பின்னடைவுகளைச் சந்தித்த போதிலும், வளர்ந்து வரும் நடிகராக ‘இளைய தளபதி’ என்ற படத்த்துடன் வலம் வந்தார். 

Leo

இறுதியாக தற்போது ‘தளபதி’ ஆகவும் மாறியுள்ள விஜய் தென்னிந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறியுள்ளார். அவர் வளர்ந்து ஒரு முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதை விளக்குவது அவ்வளவு சுலபம் இல்லை. அவரது அர்ப்பணிப்புள்ள ரசிகர்கள் கூட ஏன் அவர் மீது இவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள் என்பதை விளக்க சிரமப்படுகிறார்கள்,

சிலர் அவரது நடனத் திறனைப் பாராட்டினாலும், மற்றவர்கள் அவரது நகைச்சுவை திறனையும் வெகுஜன ஈர்ப்பையும் எடுத்துக்காட்டுகின்றனர். ஒரு சிலர் அவரது திரைப்படங்களில் உள்ள பொருத்தமான கதைகள் அவரது புகழுக்கு காரணம் என்று கூறுகிறார்கள். குறிப்பாக தமிழ் சினிமாவில் நடனம், நகைச்சுவை, கவர்ச்சி மற்றும் சமூகப் பிரச்சினைகளை மிகவும் தைரியமாக எடுத்துரைப்பதில் சிறந்து விளங்கும் ஏராளமான நடிகர்கள் இருப்பதால், இந்த விளக்கங்களில் விஜய்க்கு பொருத்தமாக இல்லை.

நகைச்சுவையில் மிதமான பிடிப்பும், நடனத் திறமையும், ஆக்ஷன் காட்சிகளை திறமையுடன் கையாளும் திறமையும் கொண்ட சராசரி நடிகராக இருந்தும், ஒரு குறிப்பிட்ட அளவிலான ஸ்வாக்கருடன் இணைந்து, இன்று எப்படி இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக உருவெடுத்தார்? இதைப் புரிந்துகொள்வதற்கான எங்கள் முயற்சியின் போது, கிட்டத்தட்ட எல்லா ரசிகர்களும் அவரை விவரிக்கும் போது இரண்டு வார்த்தைகளை அடிக்கடி குறிப்பிடுவதை நாங்கள் கவனித்தோம்: ஏக்கம் மற்றும் சார்புத்தன்மை, இது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

Naalaiya therppu

எல்லாம் இல்லை, ஆனால் இன்றைய விஜய் ரசிகர்களில் பலர் 80களின் பிற்பகுதியிலோ, 90களின் பிற்பகுதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவர்கள் தான், மேலும் அவர்கள் குழந்தைப் பருவம், டீன் ஏஜ் மற்றும் இளமைப் பருவத்தில் பயணிக்கும்போது அவரை பார்த்து வளர்ந்தவர்கள். குறிப்பாக 80களின் பிற்பகுதியிலும் 90களின் பிற்பகுதியிலும் பிறந்தவர்களுக்கு, சினிமா பார்ப்பதற்காக வாய்ப்புகள் திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகளில் மட்டுமே இருந்தன, இதனால் பலர் தங்கள் ஆரம்ப ஆண்டுகளில் விஜயை தியேட்டரில் கண்டு ரசித்து ரசிக்கராக மாறியிருக்க வாய்ப்புள்ளது.

இந்த காலகட்டத்தில்தான் விஜய் என்ற 18 வயது இளைஞன் தனது இளமை அழகை வெளிப்படுத்தி, டம்ப்பெல்ஸ் பிடித்து, புஷ்-அப் செய்து தனது பிரவேசம் தொடங்கினார். இருப்பினும், அந்தக் காலத்தின் வழக்கமான தமிழ் ஹீரோக்களைப் போலல்லாமல், அவருக்கு ஒரு ஆழமான குரல் இல்லை, மேலும் அவரது குழந்தை போன்ற தோற்றம் அவர் தனது திறனைத் தாண்டி எடையை உயர்த்த முயற்சிக்கிறார் என்ற தோற்றத்தை அளித்தது. ஒரு தமிழ் ஹீரோவின் வழக்கமான குணங்கள் அவரிடம் இல்லாததால், பாக்ஸ் ஆபிஸில் படம் தோல்வியை சந்தித்து.

அதே சமயம் ஆக்ஷன் காட்சிகளில் அவரது திறமை, அவரது தோற்றம் ரஜினிகாந்தை நினைவூட்டியதால் அதிக கவனத்தை ஈர்த்தது. அவரது பலம் காதல் படங்கள் தான் என்பதை புரிந்து கொள்ள விஜய்க்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அடுத்து விஜயகாந்துடன் இணைந்து செந்தூரபாண்டி என்ற காதல் ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தையும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய்யின் ஸ்டண்ட் திறன்களையும் அவரது கவர்ச்சியான காதல் காட்சிகளும் அதிகமாக கவனிக்கப்பட்டது. அந்தக் காலத்து குழந்தைகள் விஜய் மீது தங்களது கவனத்தை திருப்பியபோது அவர் ஏற்கனவே 40 வயதுகளில் இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் பலரிடமிருந்து தனியாக தெரிந்தார்.

Leo

அதேபோல் தனது படங்களில் விஜய் இளமையாகவும் ஆக்‌ஷன் காட்சிகளில் திறமையாகவும் இருந்தார். அப்போது பெரும்பாலான இந்திய முக்கிய திரைப்படங்களின் மையப் புள்ளிகள் இதுவாக இருந்ததால் குழந்தைகள் உடனடியாக அவர் மீது பாசத்தை வளர்த்துக் கொண்டனர். அவரது தோற்றம், பல தென்னிந்திய ஆண்களுடன் எதிரொலியாக இருந்ததால் இளைஞர்கள் மத்தியில் உடனடி தொடர்பை ஏற்படுத்தியது. மேலும், ஒரு சராசரி நடிகராக இருந்தாலும், அவரது உடல் மொழியில் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி, தீவிரமான தருணங்களை அவர் திறமையாகக் கையாள்வது இளைஞர்கள் மத்தியில் ஆழமாக கவனம் பெற்றது.

கணிசமான வலியைத் தாங்கும், அதே நேரத்தில் தேவைப்படும்போது உறுதியுடன் இருக்கும், மகிழ்ச்சிகரமான நகைச்சுவை உணர்வைக் கொண்ட ஒரு காதல் ஹீரோவின் ஆளுமையை வெளிப்படுத்துவது தனது படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதை உணர்ந்த விஜய், ரசிகன் (1994), தேவா (1995), வசந்த வாசல் (1996), பூவே உனக்காக (1996), நேருக்கு நேர் (1997), காதலுக்கு மரியாதை (1997), துள்ளாத மனமும் துள்ளும் (1999), மின்சரா கண்ணா (1999), குஷி (2000), ஃப்ரண்ட்ஸ் (2001), ஷாஜகான் (2001) மற்றும் பல, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து அவரது முத்திரையை பதித்திருந்தார்.

காதல் மற்றும் இளம் ஆக்ஷன் ஹீரோ வரிசையில் பல படங்களில் நடித்து பேக்-டு-பேக் சூப்பர்ஹிட்களுடன், விஜய் கணிசமான ரசிகர்களைப் பெற்றார். அவரது பெரும்பாலான படங்களில் அற்புதமான பாடல்கள் இடம்பெற்றது என்பது அவருக்கு ஆதரவாக இருந்த முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. மெல்லிசைகளாக இருந்தாலும் சரி, உற்சாகமான பாடல்களாக இருந்தாலும் சரி, பின்னணிப் பாடல்களைக் கொண்ட இசைக் காட்சிகளில் அவரது திறமை, நடனம் என அனைத்தையுமே ரசிகர்கள் ரசிக்க தொடங்கிவிட்டனர். ஒரு சில தமிழ் நடிகர்கள் மட்டுமே சிரமமின்றி நடனமாடும் திறமை பெற்றிருந்த நேரத்தில் அந்த நடிகர்களில் ஒருவராக விஜய் தன்னை மாற்றிக்கொண்டார் என்பதால், அவரது அசைவுகள் மற்றும் நெகிழ்வுத்தன்மை பார்வையாளர்களைக் கவர்ந்தது.

Leo

இதன் மூலம் நடிகர் விஜய் ரசிகர்களின் மறுக்க முடியாத இதயத் துடிப்பாக மாறிவிட்டதால், விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து ஏறியது. அதன்பிறகு அவர் வழக்கமான தமிழ் ஹீரோப் பாதையைப் பின்பற்றினாலும், வாழ்க்கையை விட பெரிய கதாபாத்திரங்களை உள்ளடக்கி, காதல், உணர்ச்சி ஆழம் மற்றும் வசீகரிக்கும் நடனக் காட்சிகள் போன்ற தனது தனித்துவமான அனைத்தையும் படங்களில் கொண்டு வந்தார். அந்த வரிசையில் வந்த பகவதி (2002), புதிய கீதை (2003), திருமலை (2003), கில்லி (2004), மதுர (2004) மற்றும் திருப்பாச்சி (2005) உள்ளிட்ட படங்களல் அவரது முயற்சியில் முக்கிய பங்கு வகித்தனர், இதன் மூலம் இறுதியாக ‘இளைய தளபதி’ என்ற பெயரைப் பெற்றார்.

கூடுதலாக, அவரது படங்களில் பேசப்படும் சமூக கருத்துக்கள், அவரது ஆளுமையான வசனங்கள் என பலரின் பாராட்டுக்களை பெற்ற அம்சங்களும் நிறைந்திருந்தன, அந்த வரிசையில் சமூகப் பிரச்சினைகளை நேரடியாகக் கூறிய அவரது ஆரம்பகால படங்களில் ஒன்று தமிழன்(2002) இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதே நேரத்தில், அவரது திரைப்படங்களில் ஆணாதிக்கத்தின் போக்கு, பெண்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது போன்ற நிகழ்வகள் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மறுபுறம், நிஜ வாழ்க்கையில் அவரது எளிமை பலருக்கு அவரை மேலும் அன்பாக ஆக்கியது, "அவரும் நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர்" என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் வலுப்படுத்தியது. அதன்பிறகு பிரபுதேவாவின் போக்கிரி (2007) விஜய்க்கு பெரிய மகுடமாக அமைந்தது. 'விஜய்' பிராண்டை வரையறுத்த அனைத்து கூறுகளையும் திறமையாக பின்னிப்பிணைத்து, அவற்றை பல மடங்கு பெருக்கி, திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த போக்கிரி படத்தின் வெற்றியும் ஒரு சராசரி பையன் இங்கே எப்போதும் இருக்க வேண்டும் என ஒரு விஷயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த திரைப்படத்தின் மூலம், விஜய் தனது ரசிகர்களின் இதயங்களில் ஒரு வலுவான உணர்வாக மாறினார்.

Leo

20 அல்லது அதற்கு இளமைப் பருவத்தின் பிற்பகுதியில் உள்ள இளைஞர்கள் விஜயின் ரசிகர்களாக மாறினர். அந்த காலக்கட்டத்தில் வந்த  குருவி (2008), வில்லு (2009) மற்றும் சுறா (2010) போன்ற அவரது அடுத்தடுத்த படங்கள் போக்கிரி மற்றும் கில்லி படங்கள் அளவுக்கு சரியாக போகவில்லை என்றாலும் கூட,  குறிப்பிடத்தக்க ஓப்பனிங்கை பெற்றது. படத்திற்கு முன்பே வெளியான பாடல்கள் விஜய்யின், அத்தகைய படங்கள் வெளியாவதற்கு முன்பே கணிசமான எதிர்பார்ப்பை உருவாக்க உதவியது.

அவரது படங்களின் பாடல்களை பெரிய பலம் என்பதை உணர்ந்த விஜய், ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகளை மேம்படுத்தத் தொடங்கினார். இந்த நிகழ்ச்சிகள் விஜய் ரசிகர்களுக்கான திருவிழாக்களாக உருவாகத் தொடங்கின, ஏனெனில் அவர் தனது பேச்சின் கணிசமான பகுதியை தனது ரசிகர்களிடம் பாசத்தையும் நன்றியையும் வெளிப்படுத்த அர்ப்பணித்தார். அவரது மென்மையான நடத்தை, அவரது சாதாரணமான இயல்பு மற்றும் அவரது ரசிகர்கள் மீது அவர் வைத்திருந்த பாசம் ஆகியவை அவரது ஆதரவாளர்களை அவர்களின் சொந்த வழிகளில் தீவிரமாக விளம்பரப்படுத்த தூண்டியது, இதன் மூலம் அவரை அவர்களின் 'அண்ணன்'  என்று அரவணைக்க தொடங்கினர்.

சித்திக் இயக்கத்தில் வெளியான காவலன் (2011) வெற்றியின் மூலம் அவர் மீண்டும் சக்சஸ் பாதைக்கு திரும்பினார்.  அடுத்து வந்த வேலாயுதம் (2011) மற்றும் நண்பன் (2012) படங்களின் வெற்றிகள் அவரது பயணத்தை மேலும் உயர்த்தியது. தொடர்ந்து 2012-ல் வந்த துப்பாக்கி  படத்தின் அமோக வெற்றி விஜயை புதிய உச்சத்திற்கு உயர்ந்தது. இதனால் அவரது அடுத்தடுத்த படங்கள் அடிப்படையில் ஒரு மையக் கருவைச் சுற்றியே வந்ததால், தலைவா (2013) மற்றும் ஜில்லா (2014) ஆகிய படங்கள் உச்சத்தை தொட முடியவில்லை. ஆனால் அடுத்து வந்த கத்தி (2014) கணிசமாக உயரத்தை தாண்டியது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் புலி (2015) மற்றும் பைரவா (2017) ஆகிய இரண்டும் ‘விஜய்’ பிராண்டின் தாக்கத்தால். வெற்றியடைய முடிந்தது.

Leo

வளர்ந்து வரும் போக்குகள் பற்றிய விஜய்யின் உணர்திறன் புரிதல் மற்றும் பெண் வெறுப்பின் 'முறையீடு' ஆகியவையும் அவரது படங்களில் பிரதிபலிக்கத் தொடங்கியது, குறிப்பாக அட்லீயின் தெறி (2016) படம் பெரிய கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தின் மூலம் பெண் கதாபாத்திரங்களை சித்தரிப்பதில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது, அவரது திரைப்படங்கள் அவர்களை பாரம்பரிய ஸ்டீரியோடைப்களுக்குத் தள்ளுவதற்குப் பதிலாக அவர்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை கொடுத்தது. இந்த அணுகுமுறை அவரது ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது.

மெர்சல் (2017), சர்கார் (2018), மற்றும் பிகில் (2019) போன்ற படங்கள் விஜய்யை முதன்மையாக மையப்படுத்தி, பார்வையாளர்களுக்கு ஏக்கத்தைத் தூண்டும் அதே வேளையில், ஒவ்வொரு படமும் அவரது திரை ஆளுமையின் வளர்ச்சிக்கு பங்களித்தது, அவரது ரசிகர்களின் அபிமானத்தைப் பெருக்க வழிவகுத்தது. அவரின் அரசியல் பிரவேசத்திற்கும் வழி வகுத்தது. இதன் விளைவாக, பீஸ்ட் (2022) மற்றும் வாரிசு (2023) போன்ற சமீபத்திய ஏமாற்றங்கள் என்றாலும் கூட பெரிய வணிக வெற்றியாக மாறியது.

அட்லீ தனது மெர்சல் படத்தில் இளையதளபதி என்ற பட்டத்தை தளபதி என்று மாற்றினார். இந்த மாற்றம் அவருக்கு பெரிய வரவேற்பையும் கொடுத்தது. இந்த படம் கொடுத்த வெற்றி இந்திய சினிமா இதுவரை கண்டிராத மிகப்பெரிய நட்சத்திரமாக மாறி, ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி முடிந்தது. 2023-ல் உலக அளவில் முதல் நாள் சாதனையை முறியடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் சராசரிக் குழந்தைகளின் கதை இப்படித் தொடர்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment