Bigil Audio Launch: ’சர்கார்’, ’பேட்ட’, மற்றும் ’பிகில்’ ஆகியப் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த, அந்தந்த தயாரிப்பாளர்களால் சாய் ராம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி தேர்வு செய்யப்பட்டது.
Advertisment
’பேட்ட’ மற்றும் ’சர்க்காரின்’ நிகழ்வுகள் சுமூகமாக நடந்தாலும், ’பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழா நிறைய குழப்பத்தை விளைவித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் லத்தி சார்ஜ் செய்தனர். இதனால் ஒருசில ரசிகர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில் தற்போது, தமிழக உயர்கல்வித் துறை சாய் ராம் பொறியியல் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், எதன் அடிப்படையில் பிகில் ஆடியோ வெளியீட்டை நடத்த அனுமதியளித்தீர்கள் என்பது தொடர்பாக பதிலளிக்க வேண்டும், எனக் கூறப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
’சர்கார்’ மற்றும் ’பேட்ட’ ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகளின் போது இப்படி எந்த கேள்வியும் எழவில்லை என்றாலும், சுபஸ்ரீ பிரச்னை குறித்த விஜய்யின் பேச்சு, ஆளும் அரசாங்கத்தை எரிச்சலூட்டியதன் விளைவாக இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
தவிர, ’பிகில்' ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் ஆற்றிய உரை அவரது ரசிகர்களை மகிழ்வித்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அந்த பேச்சு ஆளும் அதிமுக கட்சி அமைச்சர்களை கோபப்படுத்தியது. இப்போது அதே விழாவில் விவேக் பேசியதற்கு எதிராக, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.
பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விவேக், ”சிவாஜி - வைஜெயந்திமாலா நடித்த 'இரும்பு திரை' படத்தில் இடம்பெற்ற "நெஞ்சில் குடியிருக்கும்" பாடல் பிரபலமடையவில்லை. ஆனால் 'பிகில்' படத்தில் அதே வரியுடன் தொடங்கும் பாடல் ஒரு விளக்கப்படமாக மாறிவிட்டது” என்று கூறியிருந்தார். இதனை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நல பேரவையின் கே.சந்திரசேகரன் கண்டித்துள்ளார். பழைய பாடல் நல்ல பாடலாக இல்லாவிட்டால், அதே வரியும் அதே ட்யூனும் இப்போது 'பிகில்' படத்தில் ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு முன்பு, சிவாஜியின் பராசக்தி படத்தின் ஐகானிக் காட்சிகளை வேறு படத்தில் விவேக் கிண்டலடித்திருப்பார். சிவாஜியை ட்ரோல் செய்வது மேலும் தொடர்ந்தால், அனைத்து ரசிகர் சங்கமும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தும் என்றும் விவேக்கை எச்சரித்துள்ளார் சந்திரசேகரன்.