அன்புக்கு நன்றி : மனம் திறந்த ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஓவியா, ’உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஓவியா, ’உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
oviya - big boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகள் பெற்ற நடிகை ஓவியா, ’உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி’ என 67 நாட்களுக்கு பின்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சியில் அவர் உண்மையாகவும், வெள்ளந்தியாகவும் நடந்து கொண்டது, அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

ஒவ்வொரு முறையும் அவரை வெளியேற்ற ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்யும் போது, அவர் மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே இருப்பார். அவருக்கு சமூக வலை தளங்களில் ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தனர்.

ஓவியா ஆர்மி உள்பட பல பெயர்களில் பெயரில் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்கள் உருவாக்கப்பட்டன. பிக் பாஸ் வீட்டில் இருந்த நடிகர் ஆரவ் மீது ஓவியா காதல் வசப்பட்டார். அதனை அவரிடம் நேரில் சொன்ன போது, அதனை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து ஓவியா, அங்குள்ள நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

Advertisment
Advertisements

இதையடுத்து ஓவியாவை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே அனுப்பி வைத்தனர். ஓவியா வெளியேறிய பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவராஸ்யம் குறைந்துவிட்டது. புதிதாக 3 பேர் வந்த போதிலும், விறுவிறுப்பு இல்லை. நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இடம் பிடித்து சர்சைக்குள்ளான ஜூலி,நடிகை ஆர்த்தி இருவரையும் ஓரு வாரத்துக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வர விரும்பவில்லை என வீடியோ மூலம் சொல்லியிருந்தார். அவருக்கு புது படங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் வருவதாக தகவல்கள் வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 67 நாட்களுக்கு பின்னர், ஓவியா தனது ட்விட்டரில், " உங்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் கிடைத்த அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். உங்களின் அன்புக்கு நன்றியுடனும் பொறுப்புடனும் இருப்பேன்" என்று நெகிழ்வாக பதிவிட்டுள்ளார்.

இதை அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் 14 ஆயிரம் பேர் அதனை ரீட்விட் செய்துள்ளார்கள். இதன் மூலம் நடிகை ஓவியா மீதான ரசிகர்களின் அன்பு குறையவில்லை என்றே தெரிகிறது.

Oviya Vijay Tv Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: