/indian-express-tamil/media/media_files/2025/09/23/aish-2025-09-23-15-19-34.jpg)
ரஜினியுடன் நடிக்க 3 முறை மறுத்த நடிகை, 4 முறை ஒப்புக்கொண்ட படம் மெகா ஹிட் ஆனது: அந்த நடிகை யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் ‘சூப்பர் ஸ்டார்’ என அன்போடு அழைக்கிறார்கள். வெறும் பஸ் நடத்துநராக இருந்த ரஜினி திரைத்துறையில் ஏற்படுத்திய தாக்கம் கடலளவு பெரியது.
தனது ஸ்டைலினால் தனித்துவம் பெற்ற நடிகர் ரஜினி கடந்த 1975-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் ‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தின் மூலம் பெரிதும் கவனிக்கப்பட்டார்.
ஆரம்ப காலத்தில் நடிகர் ரஜினி பெரும்பாலும் எதிர்மறையான கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, வெளியான ‘கவிக்குயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
’படிக்காதவன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’ ’வேலைக்காரன்’ ‘குரு சிஷ்யன்’, ‘ராஜாதி ராஜா’, ‘அண்ணாமலை’ ‘தளபதி’ என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலை வைத்தே அவரது படங்களில் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
‘சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும்’ போன்ற பாடல்கள் இன்று வரை மிகவும் பிரபலமான பாடலாக உள்ளது. அன்று முதல் தற்போது உள்ள இளம் இயக்குநர்கள் வரை அனைவரின் இயக்கத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார். லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அண்மையில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. நடிகர் ரஜினியுடன் நடிக்க கதாநாயகிகல் அனைவரும் நீ, நான் என்று போட்டிப்போட்டு வருவார்கள்.
இதுவரை யாரும் ரஜினியுடன் நடிக்கமாட்டேன் என்று கூறியதில்லை. ஆனால், ஒரு நடிகை மட்டும் ரஜினியுடன் நடிக்க தயங்கியுள்ளார். உலக அளவில் பெரிதும் கவனிக்கப்பட்ட அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை ஐஸ்வர்யா ராய் தான்
நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ரஜினி வெகு நாட்களாக ஆசைப்பட்டாராம். முதலில் ‘படையப்பா’ படத்தில் இவரை நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடிக்க முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது அவர் வேறு ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.
பின்னர் ’பாபா’ படத்தில் ஹீரோயினாக நடிக்க கேட்டிருக்கின்றனர். அதற்கு இவர் மறுக்கவே, அந்த வாய்ப்பு மனிஷா கொய்ராலாவுக்கு சென்றுள்ளது. தொடர்ந்து, ’சிவாஜி’, ‘சந்திரமுகி’ போன்ற படங்களில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முயற்சித்த நிலையில் அதுவும் தோல்வியடைந்தது.
இறுதியாக, ’எந்திரன்’ படத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய் சேர்ந்து நடித்திருந்தார். இயக்குநர் ஷங்கர்
ரொம்பவே கேட்டுக்கொண்டதால் ஐஸ்வர்யா ராய், ரஜினிக்கு ஜோடியாக நடித்ததாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.