அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரவிந்த் சாமிக்கு ரூ.30 லட்சம் பாக்கி இருந்ததாகவும், வருமான வரித்துறைக்கு ரூ.27 லட்சம் பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படத்தின் தயாரிப்பாளர் முருகன் குமார் அரவிந்த் சாமியிடம் படத்தின் வெளியீட்டுக்கு ரூ.35 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இந்த வழக்கில் முன்னதாக முருகன் குமார் தனது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் படத்தின் தயாரிப்பாளர் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர், தயாரிப்பாளரிடம் தற்போது எந்தச் சொத்துக்களும் இல்லை எனக் கூறினார். இதையடுத்து நீதிபதி, கைது நடவடிக்கையை தவிர்க்க தயாரிப்பாளர் தன்னை திவாலானவராக அறிவிக்கலாம் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“