ஆக்சன் டூ செண்டிமெண்ட்; ஏ.வி.எம். ஏற்க மறுத்த விஜயகாந்த் நடித்து 500 நாட்கள் ஓடிய படம்!

விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் பொன்விழா வெற்றிப் படமாக அமைந்தது "வைதேகி காத்திருந்தாள்". 1980-களின் மத்தியில் வெளிவந்த இந்தப் படம், விஜயகாந்தின் அதிரடி நாயகன் பிம்பத்தை உடைத்து, கிராமத்துப் பாசமிகு மனிதராக அவரை ரசிகர்கள் மனதில் ஆழப் பதிய வைத்தது.

விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் பொன்விழா வெற்றிப் படமாக அமைந்தது "வைதேகி காத்திருந்தாள்". 1980-களின் மத்தியில் வெளிவந்த இந்தப் படம், விஜயகாந்தின் அதிரடி நாயகன் பிம்பத்தை உடைத்து, கிராமத்துப் பாசமிகு மனிதராக அவரை ரசிகர்கள் மனதில் ஆழப் பதிய வைத்தது.

author-image
WebDesk
New Update
Vaidehi Kaathirundhal

ஆக்சன் டூ செண்டிமெண்ட்; ஏ.வி.எம். ஏற்க மறுத்த விஜயகாந்த் நடித்து 500 நாட்கள் ஓடிய படம்!

நடிகர் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் பொன்விழா வெற்றிப் படமாக அமைந்தது "வைதேகி காத்திருந்தாள்". 1980-களின் மத்தியில் வெளிவந்த இந்தப் படம், விஜயகாந்தின் அதிரடி நாயகன் பிம்பத்தை உடைத்து, கிராமத்துப் பாசமிகு மனிதராக அவரை ரசிகர்கள் மனதில் ஆழப் பதிய வைத்தது. ஆனால், இந்தப் படம் உருவானதற்குப் பின்னால் சுவாரசியமான கதை இருக்கிறது. இதனை நடிகர் அனுமோகன் யூடியூப் நேர்க்காணலில் ஒன்றில் கூறினார்.

Advertisment

"வைதேகி காத்திருந்தாள்" படத்தின் கதை தயாரானதும், முதலில் இந்தப் படத்தை இயக்க ஒரு இயக்குனர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரும் கதைக்கு ஒப்புக்கொண்டார். ஆனால், சிக்கல் தொடங்கியது கதாநாயகன் தேர்வில்தான். தயாரிப்பு நிறுவனத்திற்கு விஜயகாந்த் மீது நம்பிக்கை இல்லை. பொதுவாக, தயாரிப்பு நிறுவனங்கள் முதலில் கதையைத் தேர்ந்தெடுத்து, பின்னர் இயக்குனரை நியமித்து, இறுதியாகத்தான் கதாநாயகனைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்தப் படத்திலும், விஜயகாந்த்திற்கு பதிலாக வேறு சில முன்னணி கதாநாயகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் விரும்பியது.

ஆனால், படத்தின் எழுத்தாளர் சுந்தர்ராஜன் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இந்தப் பாத்திரத்திற்கு விஜயகாந்த் மட்டுமே பொருத்தமானவர் என்று அவர் வாதாடினார். சுந்தர்ராஜனுக்கு, சற்று கருமையான நிறமுள்ள, அதிகமான ஒப்பனை இல்லாத, யதார்த்தமான தோற்றமுடைய ஒரு கதாநாயகன் தேவைப்பட்டார். அதிரடி நாயகனாக வலம் வந்த விஜயகாந்தை, ஒரு உணர்வுப்பூர்வமான கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதில் அவர் ஆர்வம் காட்டினார். தயாரிப்பு நிறுவனம் சுந்தர்ராஜனின் யோசனையை ஏற்காததால், சுந்தர்ராஜன் தான் வாங்கிய முன்பணத்தைத் திருப்பி அளித்துவிட்டு வெளியேறினார். இது படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளுக்கு பின்னடைவாக அமைந்தது.

இதன்பிறகு, சுந்தர்ராஜன் தேவர் ஃபிலிம்ஸின் பிரபல எழுத்தாளரான துயவனை சந்தித்தார். துயவன், சுந்தர்ராஜனின் கதையைக் கேட்டு ஈர்க்கப்பட்டார். பின்னர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலமும் இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்தார். துயவன் மற்றும் பஞ்சு அருணாசலம் இணைந்து "வைதேகி காத்திருந்தாள்" திரைப்படத்தைத் தயாரிக்க முடிவெடுத்தனர். இந்தப் படம் வெளியானதும், அது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, பொன்விழா வெற்றி பெற்றது. மதுரையில் மட்டும் 500 நாட்களுக்கும் மேலாக திரையிடப்பட்டு, ஒரு புதிய சாதனையைப் படைத்தது.

Advertisment
Advertisements

"வைதேகி காத்திருந்தாள்" திரைப்படம், விஜயகாந்தின் நடிப்புத் திறனுக்கு புதிய பரிமாணத்தை அளித்தது. அதிரடி வேடங்களில் மட்டுமே அவரைப் பார்த்துவந்த ரசிகர்களுக்கு, கிராமத்து வெள்ளந்தி மனிதராக, பாசமான அண்ணனாக, காதலனாக அவர் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நடிப்பு ஆச்சரியத்தை அளித்தது. இது விஜயகாந்தின் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: