வில்லனா நல்லா போய்ட்டு இருக்கு, அதை கெடுக்க பாக்குறீங்களா? ஹீரோ வாய்ப்பை மறுத்த நெப்போலியன்!

கதாநாயகன் வாய்ப்பு வரும் பொழுது தான் மறுத்ததற்கான காரணம் குறித்து நடிகர் நெப்போலியன் மனம் திறந்துள்ளார்.

கதாநாயகன் வாய்ப்பு வரும் பொழுது தான் மறுத்ததற்கான காரணம் குறித்து நடிகர் நெப்போலியன் மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
nepolian

வில்லனா நல்லா போய்ட்டு இருக்கு, அதை கெடுக்க பாக்குறீங்களா? ஹீரோ வாய்ப்பை மறுத்த நெப்போலியன்!

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். இவர் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன்.

Advertisment

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் நெப்போலியன் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். பின்னர் தன்னுடைய பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப அரசியலில் இருந்து விலகி அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில், நடிகர் நெப்போலியன் கதாநாயகன் வாய்ப்பை மறுத்தது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் எல்லா மொழிகளிலும் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தேன். ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். 

அப்போது, இயக்குநர் பி.ஜி.ஸ்ரீகாந்த், உங்களை வைத்து கதாநாயகனாக படம் செய்யப் போகிறோம் என்றார். நான் எனக்கு ஹீரோ ஆசை எல்லாம் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் இல்லை கதை ரொம்ப அற்புதமான கதை. ரொம்ப உயிரோட்டமாக இருக்கும். 

Advertisment
Advertisements

உண்மை சம்பவத்தை செளபா எழுதியிருக்கிறார். அது ஜூனியர் விகடனில் வாரம் வாரம் வந்திருக்கிறது. அதை ராஜேஸ்வர் திரைக்கதையாக அருமையாக எழுதியிருக்கிறார். நீங்கள் நடித்தீர்கள் என்றால்  நன்றாக இருக்கும் என்றார். கதையை படித்துப் பாருங்கள் என்றார். 

நான் சாதாரணமாக படித்து பார்த்தேன். அந்த புத்தகத்தை ஒரே நாளில் படித்து முடித்துவிட்டேன். அதை படித்ததும் எனக்கு மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. என்னடா இவ்வளவு நடந்திருக்கிறது. அதுவும் உண்மையாக நடந்திருக்கிறது. 

நடித்து பார்த்தால் தான் என்ன என்று நான்கு முறை படித்து பார்த்தேன். ஒரு உற்சாகம் வந்தது. அப்படி நடித்தது தான் ’சீவலப்பேரி பாண்டி’  திரைப்படம் . வெற்றி பெற்றால் கதாநாயகனாக மாறலாம். இல்லையென்றால் வில்லனாக இருக்கலாம் என்று நடித்தேன். 

ஆனால், ‘சீவலப்பேரி பாண்டி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன்பின்னர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.‘கிழக்கு சீமையிலே’ திரைப்படம் வெற்றி பெரும் என்று நினைத்தேன் ஆனால் மிகப்பெரிய வெற்றியடையும் என்று நினைக்கவில்லை. ஒரு வருடம் எல்ல திரையரங்கிலும் ஓடியது. சிவனாண்டி என்ற கதாபாத்திரம் உயிரோட்டமாக அமைந்தது” என்றார்.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: