/indian-express-tamil/media/media_files/2025/05/12/0Fu5Mh72U9YKlanjslZ3.jpg)
'10 படம் இல்ல... அதுக்கு மேல': லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் தொடங்கி லியோ வரை, ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்துவந்த லோகேஷ், தற்போது ரஜினிகாந்த்தை வைத்து "கூலி" என்ற படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத்பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
அண்மையில், சுதிர் ஸ்ரீனிவாசன் என்ற யூடியூப் சேனலுக்கு நேர்க்காணல் கொடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் பல சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தான் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படங்களுக்கு பின் சினிமாவை விட்டு விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிய லோகேஷ், மூத்த இயக்குனர்களின் அறிவுரையை மேற்கோள் காட்டி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
"சினிமா எப்போது உங்களை உள்ளே எடுக்கும், வெளியே துரத்தும் என்று நீங்களே முடிவு செய்யக்கூடாது," என்று முக்கிய இயக்குனர்கள் தனக்கு அறிவுரை கூறியதாக லோகேஷ் குறிப்பிட்டார். "நான் 10 படங்களுக்கு மேல் பண்ண மாட்டேன் என்று எல்லாம் சொல்ல மாட்டேன். அவர்கள் சொன்னது ரொம்ப சரி. சினிமாதான் எல்லாம் முடிவு பண்ணும்" என்று தனது பணிவான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். மேலும், 10 படங்களுக்கு மேல் செய்தாலும் மகிழ்ச்சி அடைவேன் என்று லோகேஷ் கூறினார். இது சினிமாவின் மீதான அவரது தீராத காதலையும், தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தையும் காட்டுகிறது.
நன்றி: Sudhir Srinivasan
சினிமாவில் இருந்து அழைப்பு வரும் வரை தனது திரைப்பயணம் தொடரும் என்று உறுதியாக கூறும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தமிழ் திரையுலகிற்கு மேலும் பல சிறந்த படைப்புகளை வழங்குவார் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.