/tamil-ie/media/media_files/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-02-at-08.31.34.jpeg)
வசந்த் ரவி
தமிழில் வெளியாகும் கமர்சியல் படங்களுக்கு மத்தியில் அண்மைக்காலமாக திகில் படங்களுக்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து வருவதாக அண்மையில் திரையரங்கில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் அஸ்வின் திரைப்பட கதாநாயகன் வசந்த் ரவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் அஸ்வின்.
இந்த நிலையில் அப்படத்தின் கதாநாயகனான வசந்த் ரவி மற்றும் இயக்குனர் தருண் தேஜா உள்ளிட்டோர் கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வசந்த் ரவி,தமிழில் இதுவரை வெளியாகி உள்ள திகில் படங்களில் அஸ்வின் திரைப்படம் சிறப்பிடம் பெற்றுள்ளதாகவும் புதிய தொழில்நுட்பங்கள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அஸ்வின்ஸ் திரைப்படத்தில் திகில் காட்சிகள் வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறிய அவர், கமர்சியல் படங்களுக்கு மத்தியில் திகில் படங்களுக்கும் தமிழ் ரசிகர்கள் அமோக ஆதரவளித்து வருவதாகவும் படத்தை பார்த்த இளைஞர்கள் தாங்கள் பயந்தோமோ இல்லையோ தங்களது நண்பர்கள் பயந்ததை கண்டு ரசித்ததாக கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தை தொடர்ந்து இதேபோன்று திகில் படங்களில் நடிக்க ஆர்வம் வந்துள்ளதாகவும் இனிமேல் எடுக்கப்படும் திகில் படங்களுக்கு இந்த படம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் என்றும் சுட்டிக்காட்டினர். இதேபோல் பேய் இருக்கிறதா இல்லையா என்பதில் தன்னைப் பொறுத்தவரை ஆவி என்ற ஒன்று இருப்பதாகவே கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
செய்தி: பி.ரஹ்மான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.