'கோவிந்தா' பாடல் சர்ச்சை; கிரிமினல் வழக்கு தொடரப்படும்: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை நோட்டீஸ்

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கோவிந்தா பாடல் பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டு, திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கோவிந்தா பாடல் பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டு, திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
Govindha Song Issue

ஸ்ரீனிவாசா கோவிந்தா பாடலுக்கான உரிமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ளது. அந்த பாடலை மற்றவர்கள் பயன்படுத்த சட்டப்படி அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. 'தில்லுக்கு துட்டு' திரைப்பட வரிசையில் 4-வது பாகமாக தயாரான இந்த படத்தை, எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் சந்தானத்துடன் கீர்த்திகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியாகும் முன்பு படத்தில் இடம்பெற்ற 'கிஸ்ஸா 47' என்ற ராப் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பாடலில், புகழ்பெற்ற பக்தி பாடலான 'ஸ்ரீனிவாச கோவிந்தா' வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது, இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் மற்றும் அரசியல்வாதியான பானுபிரகாஷ் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் பாடலை உடனடியாக நீக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பான சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பப்பட் நிலையில், ஸ்ரீனிவாச கோவிந்தா பாடல் ஆன்லைனிலும், திரைப்படத்திலும் இருந்து நீக்கப்படாவிட்டால், நாங்கள் அவதூறு வழக்கு தொடர்ந்து 100 கோடி ரூபாய் இழப்பீடு கோருவோம்" என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து படம் வெளியாகும் முன்பு இந்த பாடல் நீக்கப்பட்டதாக படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டது.

Advertisment
Advertisements

இதனிடையே தற்போது, ஸ்ரீனிவாசா கோவிந்தா பாடலுக்கான உரிமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ளது. அந்த பாடலை மற்றவர்கள் பயன்படுத்த சட்டப்படி அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது. மேலும்,  டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கிரிமினல் வழக்க தொடரப்படும் என்று, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி சியாமளா ராவ் கூறியுள்ளார். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: