'சிந்து நதியின் மிசை...' பாடல் பதிவில் டி.எம்.எஸ் செய்த தப்பு; எப்படி சரி செய்தார் எம்.எஸ்.வி?

பாரதியின் சிந்து நதியின் மிசை பாடல் பதிவில் நடந்த சுவாரஸ்ய பின்னணி பற்றி ஐயப்ப பாடகர் வீரமணி ராஜூ பகிர்ந்துள்ளார்.

பாரதியின் சிந்து நதியின் மிசை பாடல் பதிவில் நடந்த சுவாரஸ்ய பின்னணி பற்றி ஐயப்ப பாடகர் வீரமணி ராஜூ பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TMSounda

ஐயப்ப சுவாமி பாடல்களை பாடும் பிரபல பாடகர் வீரமணி ராஜூ டி.எம்.எஸ் உடன் பணிபுரிந்த போது நடந்த  சுவாரஸ்ய அனுபவங்களை இந்து தமிழ் திசை யூடியூப் தளத்தில் பகிர்ந்துள்ளார்.  

Advertisment

அதில் பேசிய அவர், டி.எம்.எஸ் மாதிரி யாராலும் பாடி முடியாது. இனியும் அதை செய்ய முடியாது. நான் அவரிடம் 6 மாத பயிற்சி பெற்றேன். வீரமணி சித்தப்பா டி.எம்.எஸ் யிடம் சிபாரிசு செய்தார். பாட்டு கற்றுக் கொடுக்க சொல்லி கேட்டார். 
டி.எம்.எஸ் அதற்கு நான் பாட்டு கற்றுச் தர மாட்டேன். டிப்ஸ் கொடுப்பேன் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மந்தவெளியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றேன். மாடிக்கு கூட்டிச் சென்றார். 10 நிமிடங்கள் நடந்தோம். எனக்கு புரிய வில்லை. இப்போது புரிகிறது. இப்போது 3 மணி நேரம் தம் கட்டி பாட முடிகிறது. மூச்சு பிடித்து பாட முடிகிறது. இதற்கு காரணம் அது தான். நடப்பது மூச்சு பயிற்சியாக இருந்தது என்றார்.

Advertisment
Advertisements

தொடர்ந்து பேசிய அவர், எம்.எஸ்.வி சிந்து நதியின் மிசை பாடலுக்கு மியூசிக் கம்போஸ் செய்து விட்டார். டி.எம்.எஸ் பாட வேண்டும். சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே என்பது தான் வரிகள். டி.எம்.எஸ் பாடும் போது சிந்து நதியின் மீசை நிலவினிலே என்று பாடிவிட்டார். இதன்பின் எம்.எஸ்.வி அதை சரி செய்தார். கொஞ்சம் ஸ்பேஸ் விட்டு அந்த பாட்டை மாற்றி பின்னர் எம்.எஸ்.வி  சரி செய்தார் என்று கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: