/indian-express-tamil/media/media_files/jO98DDjdQaJaPAKcnemU.jpg)
விஜய்யின் "கோட்" பட சிறப்பு காட்சியாக நாளை காலை 9 மணிக்கு தொடங்கி 5 காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய்யின் 68-வது படமான 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படம் நாளை வியாழக்கிழமை (செப்டம்பர்.5) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் இருப்பதால் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின்னர் அவரது நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும். 'தி கோட்' நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில், 'தி கோட்' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரப்பட்டநிலையில், நாளை ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணிக்கு தொடங்கி 5 காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.