/tamil-ie/media/media_files/uploads/2018/07/trisha.jpg)
தமிழ்த் திரையுலகில் 16 வருடங்களாக கொடிகட்டி பறக்கும் பிரபல நாயகிகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. இவர் சமீபத்தில் நடித்துள்ள திரைப்படம் மோகினி. இந்தத் திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.
மோகினி படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது படத்தில் பேயாக நடித்திருக்கும் த்ரிஷா செய்தியாளர்களிடம் பேசினார். அந்தச் சந்திப்பில், இதுவரை யாரிடமும் வெளிப்படையாகக் கூறாத ஒரு ரகசியத்தைப் போட்டுடைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியபோது, "மோகினி படம் உண்மையிலேயே மிகவும் கஷ்டப்பட்டு நடித்தப்படம். பல்வேறு போராட்டங்கள், தடைகளுக்குப் பிறகு இப்போது ரிலீசாக இருக்கிறது. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும். இயக்குநர் மாதேஷ் அந்த அளவுக்குக் கடின உழைப்பைக் கொட்டி, லண்டனில் விஎப்எக்ஸ் வேலைகளைச் செய்து, எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
இதில் நான் வைஷ்ணவி, மோகினி என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளேன். எனக்கு அதில் மோகினி கதாப்பாத்திரம் தான் மிகவும் பிடிக்கும். பொதுவாகப் பேய் படங்கள் என்றால் எனக்கு அதிக விருப்பம். எனக்குப் பேய் நம்பிக்கை உண்டு. அதேபோல் பேய் பயமும் அதிகம்.” என்று கூறியுள்ளார்.
இதுவரை த்ரிஷாவுக்கு பேய் என்றால் பயம் என்று பலரும் தெரியாத ரகசியமாக இருந்துள்ளது. ஆனால் இந்த ரகசியத்தை நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாகப் போட்டுடைத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.