/indian-express-tamil/media/media_files/7OENFcxeQKlQw4g1lxRZ.jpg)
நடிகை திரிஷா
விஜய் - திரிஷா ஜோடியாக நடித்து 2004-ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. கில்லி படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மே மாதம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் கில்லி படம் ரீ-ரிலீஸிலும் ஹிட் அடித்து வசூலைக் குவித்தது.
கில்லி படம் ரீ-ரிலீஸிலும் வெற்றி பெற்ற நிலையில், கில்லி படத்தில் நடித்தபோது, இரவு 2 மணிக்கு லைட் ஹவுஸ் காட்சியில் நடித்த அனுபவத்தை நடிகை திரிஷா பகிர்ந்துள்ளார்.
தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படம் நடிகர் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இந்த படத்தில், விஜய் - திரிஷா ஜோடியாக நடித்திருந்தனர். அதற்கு பிறகு, திரிஷாவும் விஜய்யும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேர்ந்து நடித்த லியோ திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படமும் ரசிகர்களை ஈர்த்து வெற்றி பெற்றது. இதையடுத்து, ஹிட் ஆன படங்களை எல்லாம் ரீ-ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கில்லி படத்தில் நடித்தபோது, இரவு 2 மணிக்கு லைட் ஹவுஸ் காட்சியில் நடித்த அனுபவத்தை நடிகை திரிஷா பகிர்ந்துள்ளார்.
இது குறித்து நடிகை திரிஷா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: “கில்லி படத்தில் லைட் அவுஸ் காட்சி எடுக்கும் போது இரவு 2,3 மணி இருக்கும். காலை 9 மணியில் இருந்து ஷூட்டிங் எடுத்திருந்தோம். நானும் விஜய்யும் தூக்க கலக்கத்தில் தான் நடித்தோம்.
இது ரொமான்ஸ் காட்சி, ரெண்டு பேரும் தூங்குறீங்க எப்படி எடுக்கிறது ரொம்ப கஷ்டம் என்று இயக்குனர் தரணி கேட்டார். கிட்டத்தட்ட 15 மணி நேரம் தொடர்ந்து நடித்து வந்தோம்” என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.