New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/urvasai.jpg)
தி லெஜண்ட் பட நாயகி ஊர்வசி ரவுத்தேலா
கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தேலா தமிழில் அறிமுகமானார்.
தி லெஜண்ட் பட நாயகி ஊர்வசி ரவுத்தேலா
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் பங்களாவுக்கு அருகில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா புதிய பங்களா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த பங்களாவில் மதிப்பு தொடர்பான தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2013-ம் ஆண்டு இந்தியில் வெளியாக சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகை ஊர்வசி ரவுத்தேலா தொடர்ந்து கன்னடா பெங்காலி மற்றும் இந்தி மொழிப்படங்களில் நடித்து வந்தார். இதில் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
சரவணா ஸ்டோர் அருள் சரவணன் ஹீரோவாக அறிமுகமான இந்த படம் பான் இந்திய படமாக வெளியானது. தில் ஹாய் க்ரே என்ற இந்தி படத்திலும், பிளாக் ரோஸ் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலா ஒரு புதிய பங்களா வாங்கியதாகக் கூறப்படும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழா 2023-ல் பங்கேற்ற ஊர்வசி ரவுடேலாவின் தோற்றம் பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது புதிய பங்களா வாங்கியதன் மூலம் இணையத்தில் வைரலாகி வருகிறார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா வீட்டின் அருகில் அமைந்துள்ள இந்த பங்களா ரூ.190 கோடி விலையில் வாங்கப்பட்டதாகவும், மிகவும் ஆடம்பரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஊர்வசி ரவுடேலாவின் புதிய வீட்டில் ஆடம்பரமான தோட்டம், தனிப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் அழகான இன்டீரியர் டிசைன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஊர்வசியின் புதிய பங்களா, திரைப்படத் தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் தோட்டப் பகுதியுடன் இணைக்கப்பட்ட ஆரம்பரமான பின்வாசல் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.