‘வாய்தா’ படம் சர்ச்சை: இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது என ராஜகுல சமூகம் எதிர்ப்பு
அறிமுக இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள 'வாய்தா' படம் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாக ராஜகுலம் சமூக நலச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சையாகி உள்ளது.
அறிமுக இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள 'வாய்தா' படம் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாக ராஜகுலம் சமூக நலச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சையாகி உள்ளது.
அறிமுக இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள 'வாய்தா' படம் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாக ராஜகுலம் சமூக நலச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சையாகி உள்ளது.
Advertisment
திரைப்படங்களில் வைக்கப்படும் குறியீடுகள் மூலம் இந்த படம் தங்கள் சமூகத்தைப் பற்றிய படம், இந்த படம் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்திவிட்டது என்று தமிழ் சினிமாவில் அவ்வப்போது சர்சைகள் எழுந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த சர்ச்சைகளும் விவாதங்களும் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், இயக்குனர் மகிவர்மன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய்ள்ள படம் வாய்தா, இந்த படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார். மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், 'நக்கலைட்ஸ்' புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், ஹீரோ உள்படம் பலரும் புதுமுகங்களாக இணைந்து உருவாக்கியுள்ள ‘வாய்தா’ படம் ரிலீசுக்கு முன்பே, சர்வதேச திரைப்பட விழாக்களில் 20க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது.
Advertisment
Advertisements
இப்படத்தின் சிறப்பு காட்சிகளை பார்த்த அரசியல் கட்சி தலைவர்கள் நல்லக்கண்ணு, முத்தரசன், டி.ராஜா, கே.பாலகிருஷ்ணன், சி.மகேந்திரன், சீமான் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.
‘வாய்தா’ படம் மே 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் மே 27 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ‘வாய்தா’ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், ராஜகுல சமூக நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சையாகியுள்ளது.
வாய்தா படம், குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக கூறி இப்படத்தை வெளியிட கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜகுல சமூக நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்த புகார் மனுவில், “சாதி வன்மத்தை தூண்டும் விதமாக இயக்குநரும், தயாரிப்பாளரும் படத்தை எடுத்துள்ளதாகவும், வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாக உள்ள வாய்தா திரைப்படத்தை ஈரோடு மாவட்ட திரையரங்குகளில் வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"