பாட்டு எழுத திணறிய வாலி; எம்.ஜி.ஆர் கொடுத்த பாயசத்தால் பிறந்த சூப்பர் ஹிட் பாடல்

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று உருவான கதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று உருவான கதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
MGR

வாலி வரிகளில்  எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று உருவான சுவாரஸ்ய பின்னணி பற்றி  பார்ப்போம்.  எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்பு சத்யா ஸ்டுடியேவில் நடந்து கொண்டிருந்தது. படத்தில் பாடல் எழுத கவிஞர் வாலி அங்கு வந்தார். பாடல் வரிகள் சரியாக வராமல் இருந்தது. அப்போது எம்.ஜி.ஆர் அங்கு வர என்ன கவிஞரே பாடல் ரெடியா என்று கேட்கிறார். 

Advertisment

அதற்கு வாலி, இன்னும் வரிகள் சரியாக கிடைக்க வில்லை என்று கூறுகிறார். அதற்கு எம்.ஜி.ஆர் எல்லாம் சரியாக வரும் என்று கூறி அவருக்கு அவல் பாயசம் கொடுக்கிறார். பாயசத்தை வாங்கி கொண்டு யோசனையில் இருந்தார் வாலி.

அப்போது அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் வந்தனர். வாலி பாயசம் சாப்பிட்டீர்களா என்று கேட்கிறார். அதற்கு ஒருவர் எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் கொடுத்தார் என்று கூறுகிறார். இதைக் கேட்ட பின் தொழிலாளர்கள் கூறிய வார்த்தைகளை வைத்து வாலி ஒரு பாடலை உருவாக்கினார்.

எம்.ஜி.ஆரும் அதை பார்த்து மெய் சிலிர்த்து போனார். அது தான் 'கொடுத்தது எல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான்' என்ற மெகா ஹிட் பாடல்.  எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடலாகும். 

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: