சில நாட்களுக்கு முன்பு இணையம் முழுக்க ‘நேசமணியாக’ ஆட்கொண்டிருந்தார் நடிகர் வடிவேலு.
எப்போதுமே மீம்ஸ்களின் மூலம் இணையத்தில் வலம் வரும் அவர், நேசமணியின் மூலம் உலகளவில் ட்ரெண்டாகினார். இது குறித்து அவரிடம் கேட்க, ஊடகங்கள் முந்தியடித்தன.
அப்படியாக சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்க்காணல் ஒன்றில், ’இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் போது, இயக்குநருக்கு எதுவுமே தெரியவில்லை என்றும், நான் தான் நிறைய ஐடியா கொடுத்தேன் என்றும் கூறிய அவர், இயக்குநரை அவன் இவன் என்றும் குறிப்பிட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/06/201807180026489915_In-controversyActor-Vadivelu_SECVPF.jpg)
இதற்கு எதிராக பல இயக்குநர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இம்சை அரசன் படத்தில் உதவியாளராகப் பணியாற்றி இயக்குநர் நவீன், “அண்ணன் வடிவேலுவின் நேர்காணல் பார்த்தேன். இயக்குனர் சிம்புத்தேவனை, சின்ன பையன், சின்ன டைரக்டர், பெருசா வேலை தெரியாதவர் என்றெல்லாம் பேசி இருக்கிறார். இவரை கதாநாயகனாக வைத்து வெற்றி படம் கொடுத்த ஒரே டைரக்டரை ஏதோ இவரால் தான் புலிகேசி உருவானதுபோல் ‘உடான்ஸ்’ விடுகிறார்.
உங்களுக்கு இவ்வளவு அகந்தை கூடாது. உங்களால் தான் புலிகேலி படம் வெற்றி பெற்றது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜெட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் ஓடவில்லை. சிம்புதேவனையும், இயக்குனர் ஷங்கரையும் நீங்கள் மரியாதை குறைவாக பேசுவதை ஏற்க முடியாது.
23-ம் புலிகேசி-2 படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கு இழப்பே. அதற்கு காரணமான உங்கள் அகந்தையும் ஆணவமும் கண்டிக்கத்தக்கது” என ட்விட்டரில் தனது கண்டத்தைப் பதிவு செய்திருந்தார்.
இயக்குநர் சமுத்திரக்கனி,
எனத் தெரிவித்திருந்தார்.
இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன்,
இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இயக்குநர் சுசீந்திரன்,
எனத் தனது கண்டத்தை தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர்கள் அனைவரும் ‘#Dont_Forget_the_Creators' என்ற ஹேஷ் டேக்கில் வடிவேலுவுக்கு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.