New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/09/B17AXo7CPIM6xCEUQaIL.jpg)
கவிஞர் வைரமுத்து, தனது பாடல் வரிகள் திரைப்படங்களின் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த சூழலில், அதே பதிவை தற்போதும் அவர் வெளியிட்டுள்ளது, ஏன் என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைகிறது.
கவிஞர் வைரமுத்து, கடந்த ஆண்டு வெளியிட்ட சமூக ஊடக பதிவு ஒன்றை தற்போது மீண்டும் வெளியிட்டிருப்பது சினிமா ரசிகர்கள் இடையே கேள்வியை எழுப்புகிறது.
கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தனித்துவமான தமிழில், புதுமையை புகுத்தி இவர் எழுதும் வரிகள், தற்போதைய ஜென்ஸி கிட்ஸ் வரை பிரபலமாக இருக்கிறது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு, கவிஞர் வைரமுத்து தனது சமூக ஊடகத்தில் ஒரு பதிவை வெளியிட்டுருந்தார். அதில், "என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை
ஒன்றா இரண்டா... 'பொன்மாலைப் பொழுது', 'கண் சிவந்தால் மண் சிவக்கும்', 'இளைய நிலா', 'ஊரத் தெரிஞ்சுகிட்டேன்', 'பனிவிழும் மலர்வனம்', 'வெள்ளைப் புறா ஒன்று', 'பூவே பூச்சூட வா', 'ஈரமான ரோஜாவே', 'நிலாவத்தான் கையில புடிச்சேன்', 'மெளன ராகம்', 'மின்சாரக் கண்ணா', 'கண்ணாளனே', 'என்னவளே', 'உயிரே', 'சண்டக்கோழி', 'பூவெல்லாம் கேட்டுப் பார்', 'தென்மேற்குப் பருவக்காற்று', 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'நீ தானே என் பொன் வசந்தம்', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'தங்கமகன்' இப்படி இன்னும் பல...
சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை; காணும் இடங்களில் கேட்டதுமில்லை; கலைசெல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன்
என்னுடைய
— வைரமுத்து (@Vairamuthu) June 9, 2025
பல்லவிகள் பலவற்றைத்
தமிழ்த் திரையுலகம்
படத் தலைப்புகளாகப்
பயன்படுத்தி இருக்கிறது
அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும்
என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு
மரியாதைக்குக்கூட
ஒரு வார்த்தையும் கேட்டதில்லை
ஒன்றா இரண்டா...
பொன்மாலைப் பொழுது,
கண் சிவந்தால் மண் சிவக்கும்,
இளைய நிலா,…
ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது; ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?" என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு, இளையராஜாவை விமர்சிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று பலரும் விமர்சித்தனர்.
memoryல வந்திருக்கும் போல.
— KARTHIK (@get2karthik) June 9, 2025
போன வருசம் தான ஐயா இதெல்லாம் பேசி இருந்தீங்க.... https://t.co/uWySyDy41W pic.twitter.com/EgUTGAd7kf
இந்நிலையில், இதே பதிவை இன்றைய தினமும் (ஜூன் 9) கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். அதே பதிவை, ஓராண்டு கழித்து பதிவிடுவதற்கான காரணம் என்னவென்று சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், மெமரீஸ் ஆப்ஷனில் காண்பிக்கப்பட்ட பதிவை, வைரமுத்து மீண்டும் பதிவிட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.