தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான வனிதா விஜயகுமார், பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகள் மூலம் தமிழ் மக்களின் இதயங்களிலே கால் பதித்தார்.
சில நாட்களுக்கு முன்பாக தனது மறுமணம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதில், " ஜூன் 27-ம் தேதி மாலை 4 மணியளவில் பீட்டர் பால் என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. “நான் கல்யாணம் பண்ணப்போறவர் ஒரு ஃபிலிம்மேக்கர், டெக்னீஷயன். இப்ப பெரிய புராஜெக்ட்ல வொர்க் பண்ணிட்டு இருக்கார். அந்த புராஜெக்ட்ல நானும் இருக்கேன். அப்படித்தான் அவரைத் தெரியும். லாக்டெளன் நேரத்துல அவர்தான் சேனல் ஆரம்பிக்க நிறைய ஹெல்ப் பண்ணார். விஷுவல் எஃபெக்ட்ஸ் டைரக்டர் அவர். பாலிவுட், ஹாலிவுட்னு வொர்க் பண்ணியிருக்கார். இங்கேயும் வொர்க் பண்ணிட்டு இருக்கார்” என தனது வருங்கால கணவரைப் பற்றி தெரிவித்திருந்தார் .
இந்நிலையில், ஜோவிகா விஜயகுமார் தனது தாயாரின் மறுமணம் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " என் அம்மா எனக்கு அளித்த வாழ்க்கைக்கு நான் உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும். நான் அவளை நிபந்தனையின்றி நேசிக்கிறேன், ஆதரிக்கிறேன். அம்மாவுடன் உட்கார்ந்து பேசுங்கள், அவரை நம்புங்கள். தான் என்ன செய்கிறோம் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்! ..... அவளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நான் என்றும் எனது அம்மாவுக்கு அருகில் தான் இருப்பேன் என்பதை வெறுப்பாளர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கையில் நீங்களாகவே பெரிய உயரங்களை அடைந்துவிட்டீர்கள், அதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். !! லவ் யூ லோட்ஸ் மா!" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil