Advertisment

முதல் கிரஷ் இவர்தான்... எனக்கு இப்படி ஒரு அப்பா இருந்தால் போதும் - வனிதா விஜயகுமார் எமோஷனல் பேச்சு

பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், என்னைப் போன்ற 80களில் பிறந்தவர்களுக்கு பிரசாந்த் தான் முதல் கிரஷ் என்றும் தியாகராஜன் போல ஒரு அப்பா இருந்தால் போதும் என்றும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

author-image
WebDesk
New Update
Vanitha Vijayakumar

பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், தியாகராஜன் போல ஒரு அப்பா இருந்தால் போதும் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். 

பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், என்னைப் போன்ற 80களில் பிறந்தவர்களுக்கு பிரசாந்த் தான் முதல் கிரஷ் என்றும் தியாகராஜன் போல ஒரு அப்பா இருந்தால் போதும் என்றும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். 

Advertisment

நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'அந்தகன்'. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி  மாபெரும் வெற்றி பெற்ற  ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்காக அந்தகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில், சிம்ரன், வனிதா விஜயகுமார், இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், யோகி பாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் பிரசாந்த் நடிப்பில் அவருடைய தந்தை இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை நடிகர் பிரசாந்த்தின் தந்தையும் இயக்குனருமான தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். 

பிரசாந்த்தின் அந்தகன் படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் படத்தின் புரோமோஷன் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், அந்தகன் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படம் பிரசாந்துக்கு நல்ல கம் பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், 'அந்தகன்' படத்தின் 'அந்தகன் ஆந்தெம்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார். கவிஞர் உமாதேவி மற்றும் ஏகாதசி எழுதியுள்ள இந்த பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'கோட்' திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், அந்தகன் படத்தில் நடித்துள்ள நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், பிரசாந்த்துக்கு கிடைத்தது போல எனக்கு இப்படி ஒரு அப்பா இருந்தால் போதும் என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.  நிகழ்ச்சியில், வனிதா விஜயகுமார் பேசுகையில், இன்றைய நாள் எனக்கு மிகவும் முக்கியமான நாள். அந்தகன் என் வாழ்க்கையில் நான் நடித்த படம் இல்லை, இது அதற்கும் மேல். இன்னும் சொல்லப்போனால் எமோஷன். இந்தப் படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்துள்ளது என்பது போன்ற எமோஷனை நான் சொல்லவில்லை, இது எனது குடும்பம். எனது காட் ஃபாதர் யார் என்றால் அது தியாகராஜன் சார்தான். அவர் மீது நான் அதிக அன்பு வைத்திருக்கின்றேன்” என்று கூறினர். 

அந்தகன் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய நடிகை வனிதா விஜயகுமார், “என்னைப்போன்ற 80களில் பிறந்தவர்களுக்கு நடிகர் பிரசாந்த் தான் முதல் கிரஷ். எங்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகன். கடந்த சில ஆண்டுகளில் எனக்கும் பிரசாந்துக்கும் இடையில் உருவான நட்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது. நான் அவரை நினைத்து மிகவும் பெருமைப் படுகின்றேன். பிரசாந்த் அவருடைய அப்பாவிடம் இருந்து கடின உழைப்பு, நேர்மை உள்ளிட்ட பல குணங்களைக் கற்றுள்ளார்.” என்று நடிகர் பிரசாந்த்தைப் பாராட்டிப் பேசினார். 

தொடர்ந்து பேசிய நடிகை வனிதா விஜயகுமார், “எனக்கு இப்படி ஒரு அப்பா இருந்தா போதும் என்று கூறும்போது வனிதா கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். மேலும், வனிதா விஜயகுமார் பேசுகையில், “அதுதான் பிரசாந்த் அதுதான் தியாகராஜா சார். இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதற்கு முக்கிய காரணம் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் படத்தில் பணியாற்றியுள்ள டெக்னீசியர்கள். என்னிடம் வந்து இந்த படம் தொடர்பாக கூறியபோது, எனக்கு இது பிரசாந்த் படம் எனத் தெரியாது. தெரிந்திருந்தால் கொஞ்சம் பணம் அதிகம் கேட்டுப் பெற்றிருப்பேன்.  ஆனால் எனக்கு நான் சூட்டிங்கில் கலந்து கொண்ட எல்லா நாட்களிலும் பணம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர், டப்பிங்கிற்குப் போனேன், அப்போது இரட்டிப்பு பணத்தை தியாகராஜன் சார் கொடுத்தார். அவரிடம் பணம் உள்ளது என்பதால் அவர் கொடுக்கவில்லை. அவருக்கு கலைஞர்களை மதிக்கத்தெரிகின்றது, அவர்களின் திறமைகளுக்கு கௌரவம் செய்யத் தெரிகின்றது என்பதால்தான்.” என்று வனிதா விஜயகுமார் கூறினார்.

மேலும், “நான் ஒருமுறை எனது போனைத் தொலைத்துவிட்டேன். அந்த நேரத்தில் அவர் எனக்கு போன் செய்தார். உடனே நான் அவரிடம்,'கொஞ்சம் பொறுங்கள் நான் எனது போனைத் தொலைத்துவிட்டேன்' எனக் கூறினேன். உடனே அவர் எங்கே இருக்கின்றாய் எனக் கேட்டார். எனக்கு ஐ போனில் 13 மேக்ஸ் ப்ரோ போனை வாங்கித் தந்தார். இதுபோல் யார் செய்வார்கள். யாருக்கு செய்யத் தோன்றும்” என வனிதா விஜயகுமார் பேசினார். தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார் தனது தந்தை விஜயகுமாருடன் மனக்கசப்பு காரணமாக குடும்பத்தில் இருந்து பிரிந்து தனது மகள்கள் உடன் தனியாக வசிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actress Vanitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment