சேலை எப்படி கட்டணும்னு இவங்களைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க... வாரிசு நாயகி ராஷ்மிகா கலெக்ஷன்ஸ்

கடந்த ஆண்டு வெளியான கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது விஜய் நடிப்பில் தயாராகியுள்ள வாரிசு படத்தின் மூலம் தனது 2-வது தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது விஜய் நடிப்பில் தயாராகியுள்ள வாரிசு படத்தின் மூலம் தனது 2-வது தமிழ் படத்தில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சேலை எப்படி கட்டணும்னு இவங்களைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க... வாரிசு நாயகி ராஷ்மிகா கலெக்ஷன்ஸ்

நடிகை ராஷ்மிகா மந்தனா சேலையில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

கன்னடத்தில் வெளியான கிர்க்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா, சலோ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த ராஷ்மிகா, தெலுங்கு கன்னடம் மொழி படங்களில் நடித்து வந்தார்.

அதன்பிறகு கடந்த ஆண்டு வெளியான கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா தற்போது விஜய் நடிப்பில் தயாராகியுள்ள வாரிசு படத்தின் மூலம் தனது 2-வது தமிழ் படத்தில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் தற்போது முன்னணி நாயகியாக வலம் வரும் இவர், ஹிந்தியின் மிஷன் மஞ்சு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

அதேபோல் தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த புஷ்பா படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும் வாரிசு படம் வரும் 12-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்காக விஜய் ரசிகர்களை போல் ராஷ்மிகாவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், ராஷ்மிகா அவ்வப்போது சமூகவலைதளங்களிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இவர் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவில், இந்த நாளில் மிகுந்த அன்பு பொங்கி வழிவதை நான் பார்க்க நேர்ந்தது, அது நான் என்னை மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன்... நன்றி என் அன்பே... 2022ன் கடைசி சில நாட்கள்... இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு அன்பு மட்டுமே இருக்கும் என்று நம்புகிறேன்... கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக! நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி! என்று பதிவிட்டுள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: