தப்பான தயாரிப்பாளரிடம் இந்த கதை போயிருந்தால்... வெற்றிமாறன் பற்றி பெருமை பேசிய பேட் கேர்ள் இயக்குனர்!

படம் வெளியாவதற்கு முன்பு, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்களை எதிர்கொண்டது. ஆனால், செப்டம்பர் 5-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியாவதற்கு முன்பு, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்களை எதிர்கொண்டது. ஆனால், செப்டம்பர் 5-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது.

author-image
WebDesk
New Update
Varsha Bharath bad Girl

வெற்றிமாறன் – அனுராக் காஷ்யப் தயாரிப்பில் பெரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான பேட் கேர்ள் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படம் குறித்து இயக்குனர் வர்ஷா பரத் பேசியுள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Advertisment

வர்ஷா பரத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பேட் கேர்ள்' திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஞ்சலி சிவராமன் நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம், ஒரு பிராமணப் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. படம் வெளியாவதற்கு முன்பு, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்களை எதிர்கொண்டது. ஆனால், செப்டம்பர் 5-ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது.

சமீபத்தில், ஒரு பேட்டியில், படம் உருவானபோது தான் சந்தித்த சவால்களையும், அவற்றை எப்படி எதிர்கொண்டேன் என்பதையும் வர்ஷா பரத் பகிர்ந்துகொண்டார். சுதிர் ஸ்ரீனிவாசனுக்கு அளித்த பேட்டியில், "இந்த கதையை எழுதியது எனக்கு ஒருவித மன அமைதியைக் கொடுத்தது. தயாரிப்பாளராக இயக்குனர் வெற்றிமாறன் சார் இருந்தது எனக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது. என்னுடைய இந்த தனிப்பட்ட கதை சொல்லும் பாணியை வேறு யாரும் ஆதரித்திருக்க மாட்டார்கள்" என்று அவர் கூறினார்.

அதேபோல், தவறான தயாரிப்பாளரிடம் 'பேட் கேர்ள்' திரைப்படம் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது பற்றியும் வர்ஷா பரத் தனது கவலையைப் பகிர்ந்துகொண்டார். "இந்தத் திரைப்படம் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். கிளைமாக்ஸில் கதாநாயகி, கதாநாயகனைக் காதலித்து, மகிழ்ச்சியான முடிவோடு இந்த கதை முடிய வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் 'பேட் கேர்ள்' உருவானது. இது வழக்கமான கதை சொல்லும் பாணி கொண்ட திரைப்படம் இல்லை" என்றும் அவர் கூறினார்.

Advertisment
Advertisements

வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் சாந்திப்ரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹிருது ஹாரூன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம், ஒரு இளம் பெண் தனது வாழ்க்கையைத் தானே வடிவமைத்துக்கொள்வதைப் பற்றியது. மேலும் நடிகை பானுப்பிரியாவின் தங்கை சாந்திப்பிரியா பல ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்டரி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: