நீ அந்த பொண்ண கட்டிக்கோ, ஆனா ஒரு கண்டிஷன்; வெற்றிமாறனுக்கு செக் வைத்த அம்மா; சப்போர்ட்டுக்கு வந்த பாலுமகேந்திரா!

வெற்றிமாறன் தனக்கு பிடித்த பெண்ணை தனது அம்மாவிடம் அறிமுகப்படுத்திய தருணம் மற்றும் அவர்களது திருமணம் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை அவரது தாயார் பகிர்ந்துள்ளார்.

வெற்றிமாறன் தனக்கு பிடித்த பெண்ணை தனது அம்மாவிடம் அறிமுகப்படுத்திய தருணம் மற்றும் அவர்களது திருமணம் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை அவரது தாயார் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
vetrimaran

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் சினிமாவுக்கு வந்தது எப்படி என்பது குறித்து அவரது அம்மா மேகலா சித்திரைவேல் கூறியுள்ளார்.கடந்த 2007-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தென்னிந்திய சினிமாவில் பல துறைகளில் தனது முத்திரையை பதித்துள்ள இயக்குனர் பாலுமகேந்திராவின் சிஷ்யரான வெற்றிமாறன் முதல் படத்திலேயே பெரும் பிரபலமானார்.

Advertisment

பொல்லாதவன் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்ததாக 4 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான படம் ஆடுகளம். இந்த படத்திற்காக சிறந்த இயக்குனர் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என இரண்டு தேசிய விருதுகளை வென்ற வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் இயக்குனராக வளர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து விசாரணை, வட சென்னை, அசுரன், உள்ளிட்ட படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது சூரி விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.இதனிடையே சமீபத்தில் வாவ் தமிழா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வெற்றிமாறனின் அம்மா மேகலா, வெற்றிமாறனின் திருமண கதையை பற்றி கூறியுள்ளார்.

வெற்றிமாறனின் தாயார் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் போது வெற்றிமாறன் சென்று ஒரு பெண்ணை பிடித்திருப்பதாக கூறியுள்ளார். பெயர் ஆர்த்தி, நல்ல பெண், உங்களைப்போலவே என்றூ கூறியுள்ளார். வெற்றிமாறன் அம்மா உடனே அந்த பெண்ணை அழைத்துவா என்று கூறியுள்ளார். அதேபோல வெற்றிமாறனும் அழைத்து வந்த நிலையில் குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர். ஆனால் அவருடைய தாயார் பெண்ணின் வீட்டில் ஒப்புக்கொண்டாள் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisment
Advertisements

இந்நிலையில் ஆர்த்தியின் அப்பா அம்மாவும் வந்து பேசியுள்ளனர். அவர்களுக்கு சிறிது தயக்கம் இருந்தபோதிலும் இயக்குனர் பாலு மகேந்திரா வந்து இதுபோல ஒரு பையன் கிடைக்காது நம்பி பெண்ணே கொடுங்கள் என்று கூறியுள்ளார். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் செய்யப்பட்டது. திருமணத்தின்போது வெற்றிமாறன் தாலி கட்ட மாட்டேன் என்று மறுத்த நிலையிலும் அவரது தாயார் கூறியதால் தாலி கட்ட ஒப்புக்கொண்டார். அதுவும் தன் தாய் கையாளையே வாங்கி ஆர்த்திக்கு தாலி கட்டினார் தற்போது இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

Vetrimaaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: