/tamil-ie/media/media_files/uploads/2017/09/vidyabalan7591.jpg)
பாலிவுட் நடிகை வித்யா பாலன் என்.டி.ஆர் கதாநாயகுடு / என்.டி.ஆர் மாகாநாயகுடு படங்களின் மூலம் கடந்தாண்டு தெலுங்கு திரையுலகுக்கு அறிமுகமானார்.
தற்போது ’நேர்க்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் தமிழுக்கும் அறிமுகமாகியிருக்கிறார். அஜித் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.
பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’பிங்க்’ படத்தின் ரீமேக்கான இதை போனி கபூர் தயாரித்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது.
ஹைதராபாத்தில் நேர்க்கொண்ட பார்வை படத்தின் படபிடிப்பு நடக்கையில், அஜித்தின் எலிமையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு போனாராம் வித்யா பாலன்.
தனது போர்ஷன் முடிந்து விட்டாலும் கூட, உடனே வீட்டுக்கு செல்லாமல், வித்யாவின் போர்ஷன் முடிந்ததும் அவரை பத்திரமாக ஹோட்டலுக்கு காரில் ஏற்றி ‘பை’ சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டு தான் அஜித் கிளம்புவாராம்.
இந்த விஷயத்தால் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறாராம் வித்யா பாலன்.
தவிர மீண்டும் அஜித்தின் அடுத்தப் படத்தை வினோத் இயக்க, போனி கபூரே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.