Advertisment

'என் வாழ்க்கையின் ஆதாரம்'... முதல் திருமண நாளில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து

முதல் திருமண ஆண்டு விழாவில் மனைவி நயன்தாரா மற்றும் அவர்களின் இரட்டை மகன்கள் உள்ள புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Wikki Nayantara

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் 9-ந் தேதி இயக்குனரும் தனது நீண்டநாள் காதலருமான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், இந்திய சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

திருமணம் முடிந்து அடுத்த சில மாதங்களில் தாங்கள் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக விக்கி நயன் ஜோடி அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு குழந்தைகளுடன் இவர்கள் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவரும் இன்று (ஜூன் 9) தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

இந்த ஜோடிக்கு திரைத்துரையில் சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுக்காக இனிமையான வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், விக்னேஷ் சிவன், தனது மனைவி நயன்தாரா அவர்களின் இரட்டை குழந்தைகள் உடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “என் உயிரோட ஆதாரம் நீங்கள்தானே (என் வாழ்க்கையின் ஆதாரம் நீதான்) 1 வருடம் நிறைய மறக்க முடியாத தருணங்கள் நிறைந்தது! ஏற்ற தாழ்வுகள் எதிர்பாராத பின்னடைவு! சோதனை நேரம் இருந்தாலும் அபரிமிதமான அன்பும் பாசமும் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்க்க வீட்டிற்கு வருவது மிகுந்த நம்பிக்கையை உருவாக்குகிறது. ஏற்கனவே கண்ட அனைத்து கனவுகள் மற்றும் இலக்குகளை நோக்கி தொடர்ந்து இயங்குவதற்கான அனைத்து ஆற்றலையும் அளிக்கிறது.

என் உயிர்கள் மற்றும் உலகம் அனைத்தையும் ஒன்றாகப் பிடித்துக் கொண்டேன். குடும்பம் கொடுத்த பலம் எல்லாத்தையும் மாற்றுகிறது! சிறந்த மனிதர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர், அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பதற்கு கடுமையாக உழைக்கும் ஆற்றலை கொடுக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் முதல் படத்தில், நயன்தாரா சிவப்பு நிற சாண்டா ரோம்பர் அணிந்த குழந்தைகளில் ஒருவருடன் கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார்.

மற்ற படங்களில் நயன்தாரா அவர்களின் சிறு குழந்தைகளுடன் போஸ் கொடுப்பது போல அனைத்து புன்னகைகளும், தாய்மையின் அதிர்வுகளை வெளிப்படுத்துகின்றன. நயன்தாரா இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் இந்தியில் தயாராகி வரும் 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கிறார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment