/indian-express-tamil/media/media_files/2025/09/17/vijay-antony-2025-09-17-18-15-55.jpg)
'நான் நடிகன் என்று சொல்லத் தகுதியே இல்ல'... 'சக்தித் திருமகன்' பட விழாவில் விஜய் ஆண்டனி பேச்சு
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'சக்தித் திருமகன்' திரைப்படம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் ஆண்டனியின் 25-வது படமான இதில், வாகை சந்திரசேகர், சுனில் கிருபாலானி, செல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் நாயகனாக நடித்ததோடு மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் இசையையும் விஜய் ஆண்டனியே கவனித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மதுரை நகரில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, "இந்த படத்தில் பல திறமையான நடிகர்கள் உள்ளனர். அவர்களுடன் ஒப்பிடும்போது, நான் ஒரு நடிகன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு தகுதி இல்லை. எனக்கு இருக்கும் ஒரே பலம், நான் நல்ல கதைகளைத் தேர்வு செய்வதுதான். அந்தக் கதைதான் என்னை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்னைப் போல கதையைத் தேர்வு செய்யும் பழக்கம் இப்போது தமிழில் வேறு யாருக்கும் இல்லை. உதாரணமாக, 'பிச்சைக்காரன்' படத்தில் ஒரு யாசகராக நடிக்க எந்த நடிகரும் சம்மதிக்க மாட்டார்கள். ஆனால், நான் அத்தகைய முடிவுகளைத் தைரியமாக எடுக்கிறேன். நல்ல கதைதான் என்னை நடிகனாக மாற்றியது. இதுபோன்ற கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பல புதிய இயக்குநர்கள் உருவாகுவார்கள். அதற்காகத்தான் நான் நடிக்கிறேன், ஒரு நடிகன் என்பதற்காக அல்ல" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.