விஜய் நடித்துள்ள கேங்ஸ்டர் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘லியோ’ உலகம் முழுவதும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், டிக்கெட்டுகள் முன்பதிவு அனைத்து இடங்களிலும் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. சிங்கப்பூரில், முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திற்குள் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.
தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் கே.ஜி சினிமாஸ் திரையரங்கில் மட்டும் லியோ அட்வான்ஸ் புக்கிங்கின் 2வது நாளில் 15 ஆயிரத்துக்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனை ஆனது. அதே போல, இந்த பகுதியில் பி.வி.ஆர் மற்றும் ஐ.நாக்ஸ் திரையரங்குகளில் லியோ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்னும் திறக்கப்படவில்லை. மேலும் இந்த வார இறுதியில் இருந்து டிக்கெட்டுகள் முன்பதிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் லியோ படத்தின் முன்பதிவும் இன்னும் திறக்கப்படவில்லை.
லியோ படத்தின் ரிலீசுக்காக ஆர்வமாக உள்ள விஜய் ரசிகர்கள் முன்பதிவு செய்ய காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், லியோ முன்பதிவில் டிக்கெட் முன்பதிவு எப்போ ஓபன் ஆனாலும் ரிசர்வ் ஆகுற மாதிரி கோடிங் போட்டு தொழில்நுட்பம் தெரிந்த டெக்கிகளும் காத்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.
லியோ முன்பதிவில் ஆர்வமாக உள்ள டெக்கிஸ்கள் விஜய்யின் லியோ படத்துக்கு டிக்கெட் முன்பதிவு எப்போது ஓபன் ஆனாலும் நோட்டிஃபிகேஷன் வந்து டிக்கெட் உடனடியாக புக் ஆகுற மாதிரி கோடிங் போட்டு காத்திருப்பதாக ஒரு எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மாறா என்ற எக்ஸ் பக்கத்தில், “வேலைக்கு கூட இப்படி மூளையை பயன்படுத்தியது இல்லை. லியோ முதல் நாள் முதல் காட்சி (FDFS) எப்போது ஓபன் ஆனாலும் உடனடியாக நோட்டிஃபிகேஷன் வந்து புக் ஆகிற மாதிரி கோடிங் போட்டு வெயிட் பண்ணிட்டு இருக்கோம்” என்று பதிவு போட்டு கோடிங் ஸ்கிரீன் ஷாட்டையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“