வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், 14 வருட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்புக்காக கேரளா மாநிலம் சென்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய், லியோ படத்திற்கு பின் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் மைக் மோகன் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், அடுத்து அவர் நடிப்பில் வெளியாக உள்ள படங்கள் குறித்த எதாபார்ப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே கோட் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியின் படப்பிடிப்புக்காக விஜய் கேரளா மாநிலம் சென்றுள்ளார். இதற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற அவரை பார்க்க ரசிகர்கள் குவிந்த்தால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்கள் தங்கள் 'தளபதி'யைப் பார்க்க அந்த இடத்தில் குவிந்தனர். இது குறித்து பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன, விமான நிலையம் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் விஜய் செல்லும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆன்லைனில் பரவும் வீடியோக்கள் விமான நிலையத்தின் உற்சாகமான சூழ்நிலையை காட்டுகிறது. இதில், ரசிகர்கள் ஆரவாரம் செய்து விஜய்க்கு தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
முன்னதாக, விஜய்யின் கடைசிப் படமான லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேரளாவுக்குச் சென்றபோது, அவர் மீது பெரும் கூட்டம் அலைமோதியது. லியோ கேரளா பாக்ஸ் ஆபிஸில் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு வெளியான வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்ற நிலையில், தற்போது 13 வருட இடைவெளிக்கு பின் மீண்டும் கேரளா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“