பல நாட்கள் மூடி வைத்த ரகசியம் போல நடிகை பிபாஷா பாசு மற்றும் கரண் சிங் குரோவர் தம்பதி தங்கள் பெற்றோர் ஆக இருக்கும் நல்ல செய்தியை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2001-ம் ஆண்டு ஹந்தியில் வெளியான அஞ்சனபி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிபாஷா பாசு. தொடர்ந்து பல ஹந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர், 2005-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமாக கரண் சிங் குரோவர், கடந்த 2015-ம் ஆண்டு ஹந்தியில் வெளியான அலோன் என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஹாட் ஸ்டோரி 3 என்ற படத்தில் நடித்த இவர், தற்போது 3 தேவ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அலோன் படத்தில் இணைந்து நடித்த பிரபாஷா பாசு கரண் சிங் குரோவர் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்
தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரபாஷா பாசு தனது 43 வயதில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான இருவரும் இருப்பது போன்று வெளியாகியுள்ள புகைப்படத்தில் வெள்ளை நிற உடையில் காட்சியளிக்கின்றனர். இதில் முதல் புகைப்படத்தில் கரண் பிபாஷாவின் குழந்தை பம்பைத் தொட்டிலாகவும், இரண்டாவது புகைப்படத்தில் பிபாஷா வயிற்றுக்கு கரண் முத்தமிடுவது போன்றும் அமைந்துள்ளது.
இந்த புகைப்படத்துடன் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒரு புதிய நேரம், ஒரு புதிய கட்டம், ஒரு புதிய ஒளி நமது வாழ்க்கையின் ப்ரிஸத்தில் மற்றொரு தனித்துவமான நிழலைச் இணைக்கிறது. நாம் முன்பு இருந்ததை விட நம்மை இன்னும் கொஞ்சம் முழுமையாக்குகிறது. நாங்கள் இந்த வாழ்க்கையைத் தனித்தனியாகத் தொடங்கினோம், பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்தோம். அன்றிலிருந்து நாங்கள் இருவர். இருவர் மீது மட்டும் அதிக அன்பு, பார்ப்பதற்கு கொஞ்சம் அநியாயமாகத் தோன்றியது.
இவ்வளவு சீக்கிரம், இருவராக இருந்த நாம் இப்போது மூவராக உள்ளோம். அன்பினால் வெளிப்படும் ஒரு படைப்பு, நம் குழந்தை நம்முடன் சேரும். விரைவில் மற்றும் மகிழ்ச்சிக்கு எங்களின் நன்றி, உங்கள் நிபந்தனையற்ற அன்பு, உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு எங்களுடன் ஒரு பகுதியாக இருக்கும் குழந்தை துர்கா துர்கா.
நடப்பு ஆண்டு மார்ச் மாதம், கரண் சிங் குரோவருடன் பிபாஷா பாசு தனது முதல் குழந்தையை பெற்றெடுப்பார் என்று வதந்திகள் பரவின. அப்போது எந்த கருத்தும் தெரிவிக்காத தம்பதியினர் தங்கள் இனிமையான நேரத்தை உலகத்துடன் ஆகஸ்ட் 16 அன்று 'நற்செய்தியை' அறிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.