Advertisment

விஜய் படத்தின் அந்தப் பாடலில் நடித்தது ரம்பாவே இல்ல; 25 வருட ரகசியத்தைப் பகிர்ந்த இயக்குனர்

விஜய் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல்; வண்ண நிலவாக வந்தது ரம்பா இல்லையாம்; இயக்குனர் பகிர்ந்த ஆச்சரிய தகவல்

author-image
WebDesk
New Update
Vanna Nilave

விஜய் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல்; வண்ண நிலவாக வந்தது ரம்பா இல்லையாம்; இயக்குனர் பகிர்ந்த ஆச்சரிய தகவல்

நினைத்தேன் வந்தாய் படத்தில் இடம்பெற்ற வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா! பாடலில் நடித்திருப்பது ரம்பாவே இல்லை என அப்படத்தின் இயக்குநர் செல்வபாரதி கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய், ரம்பா, தேவயானி நடிப்பில் செல்வபாரதி இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நினைத்தேன் வந்தாய். ஃபீல் குட் திரைப்படமாக வெளிவந்த நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டாகின.

இந்நிலையில் தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நினைத்தேன் வந்தாய் பாடலில் சுமார் 45 ஷாட்களில் ரம்பாவே இடம்பெறவில்லை என படத்தின் இயக்குநர் செல்வபாரதி தெரிவித்துள்ளார். இந்தசெய்தி ஒட்டுமொத்த 80 மற்றும் 90 கிட்ஸ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நினைத்தேன் வந்தாய் படம் குறித்தும், படத்தில் ரம்பா உடனான பிரச்னை குறித்தும் இயக்குநர் செல்வபாரதி பேசியிருக்கும் வீடியோ வைரலாக தற்போது பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், “நினைத்தேன் வந்தாய் படத்தில் நடிக்கும் போது எனக்கும், ரம்பாவுக்கும் சண்டை வந்துவிட்டது. நினைத்தேன் வந்தாய் படத்தை முடித்து தராமலேயே தெலுங்கு படம் ஒன்றிற்கு தேதி கொடுத்துவிட்டு நடிக்காமல் சென்றுவிட்டார் ரம்பா. நான் எவ்வளவோ கூறியும் அதை ஏற்காமல் அவர் பாட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது வண்ண நிலவே பாடல் முழுவதுமாக முடிக்காமலயே இருந்தது. ரம்பா நடிக்கவேண்டிய பாதி ஷாட்களில் நடிக்காமலேயே போய்விட்டார். நாம ஒரு டைரக்டர் சொல்றோம், நம்மள மதிக்காம போய்ட்டாங்களே, முதல் படம் பண்ணா நான் டைரக்டர் இல்லையா, இனி இவங்கள கூப்பிடனுமானு எனக்கு கோவம் வந்துடுச்சி. நம்மள மதிக்கல அவங்கள வச்சி பாட்டு பண்ணனுமானு, ரம்பா கிட்ட இருந்த காஸ்டியூம் டிரஸ்ஸ மட்டும் வாங்கிட்டு வாங்கனு சொல்லி, ஒரு ஜூனியர் நடிகையை வச்சி பாட்டு பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இதுவரை இந்த விசயம் யாருக்கும் தெரியாது, வண்ண நிலவே பாடலில் வரும் பாதி ஷாட்களில் ரம்பாவே இல்லை. கிட்டத்தட்ட 46 ஷாட்களில் ரம்பா இல்லாமலே எடுத்து முடிச்சேன். இப்போ எடுத்து பாருங்க பாட்டுல வர 46 ஷாட்ல ரம்பா இல்லாமயே பாட்டு இருக்கும். பாட்டுல ஊஞ்சலில் இருப்பது மட்டும் தான் ரம்பா, மற்றபடி ஓடிவர மாதிரி இருக்குறது எல்லாமே ரம்பா இல்லை, ஜூனியர் ஆர்டிஸ்ட் வச்சே பாட்டை எடுத்து முடிச்சேன். அவ்வளவு கோவம் இருந்துச்சுஎன்று செல்வபாரதி கூறியுள்ளார்.

மேலும், படத்தின் ப்ரீவியூ காட்சியின் போது நடந்ததை பற்றி கூறிய செல்வபாரதி, “பாட்டுல நடந்தது எதுவுமே ரம்பாவுக்கு தெரியாது. நினைத்தேன் வந்தாய் படத்தோட ப்ரீவியூ ஷோ பார்த்துட்டு இருக்கோம், வண்ண நிலவே பாடல் வந்ததும் ரம்பாவும், அவங்க அம்மாவும் எழுந்து போய்ட்டாங்க. எனக்கு தெரிஞ்சுபோச்சு இந்த விசயத்தால தான் எழுந்து போய்ட்டாங்கனுஎன்று செல்வபாரதி கூறியுள்ளார்.

இயக்குநர் செல்வபாரதி பேசிய இந்த வீடியோ நக்கீரனுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி என்று தெரிகிறது. ஆனால் இந்த வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay rambha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment