நடிகர் விஜய் சேதுபதி தயாரித்து திரைக்கு வந்துள்ள படம், ‘மேற்கு தொடர்ச்சி மலை‘ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடந்த சம்பவம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை :
லெனின் பாரதி இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் ஒட்டு மொத்த மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படம் குறித்து உணர்வுபூர்வமான பதிவுகளை தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் செய்தியாளர்கள் படம் குறித்து வெளியிட்டுள்ள விமர்சனங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.பல விருதுகளை வாங்கியுள்ள இப்படத்தை பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலகினர் தூங்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் சேதுபதி, சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திர்க்கை துறை நண்பர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.அப்போது மேடையில் பேசிய விஜய் சேதுபது உணர்வு பூர்வமான பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம்
விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது, “பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்தபோது எனக்கு ரூ.25 லட்சம்தான் சம்பளம். அப்போது தான் இயக்குனர் லெனின் என்னை சந்தித்து இந்த படத்தின் கதைக் குறித்து என்னிடம் பேசினார். இப்போது வேண்டாம். அதிகம் சம்பாதிக்கும்போது இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று லெனினிக்கு உறுதியளித்தேன்.
இப்போது இந்த படத்தை தயாரித்தேன். படமும் வெளி வந்து வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் தயாரானதும் நான் பார்த்தேன். அப்போது எனக்கு திருப்தியான படமாக தெரியவில்லை. ஆனால் படத்துக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பை பார்க்கும்போது, எனது கணிப்பு தவறு என்று புரிகிறது. நல்ல படங்களை மக்கள் கொண்டாடுவார்கள் என்று உணர்ந்துள்ளேன்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை விருப்பமில்லாமல் தான் தயாரித்தேன். ஆனால் பத்திரிகையாளர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவது செருப்பால் அடித்தது போல் உள்ளது என்னுடைய முந்தைய படங்களுக்கு பத்திரிகையாளர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் வரும்போது எனக்கு கோபம் வரும். இந்த படத்தை அவர்கள் கொண்டாடுவதன் மூலம் அவர்களின் நிலைப்பாடு சரி என நிரூபித்துவிட்டனர்” என்று கண்கலங்கியப்படி கூறினார்.