இனிமேல் வில்லனாக நடிக்கப் போவதில்லை - விஜய் சேதுபதி அதிரடி முடிவு

ரஜினி, விஜய், கமல், ஷாருக்கான் ஆகிய நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து கலக்கிய நடிகர் விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி, விஜய், கமல், ஷாருக்கான் ஆகிய நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து கலக்கிய நடிகர் விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Shah rukh khan and Vijay Sethupathi

நடிகர் விஜய் சேதுபதி

ரஜினி, விஜய், கமல், ஷாருக்கான் ஆகிய நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து கலக்கிய நடிகர் விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்க போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள்.  விஜய் சேதுபதியை ரசிகர்கள் மக்கள்செல்வன் என்று கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதியும் அவர்களின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக நிறைய படங்களில் ஓயாமல் நடித்துக்கொண்டே இருக்கிறார். விஜய் சேதுபதியின் படங்கள் ஒரு மாதத்துக்கு மூன்று படங்கள் கூட வெளியாகி இருக்கின்றன.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம் இந்தி சினிமாக்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். சமீப காலமாக விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து வருகிறார். ரஜினியின் 'பேட்ட', விஜய்யின் 'மாஸ்டர்', கமல்ஹாசனின் 'விக்ரம்' உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் ஹீரோ கதாபாத்திரங்களை விட அதிக அளவு பேசப்பட்டன.  இதனால் நிறைய படங்களில் வில்லனாக நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. தமிழ் தவிர மற்ற மொழி படங்களிலும் வில்லனாக நடிக்க அழைப்புகள் வந்தன. 

அண்மையில், இந்தியில் ஷாருக்கானின் 'ஜவான்' படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த நிலையில் 'இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன்' என விஜய் சேதுபதி அறிவித்து உள்ளார்.

Advertisment
Advertisements

இதுகுறித்து விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில்,  “கதாநாயகர்கள் பலர் தங்கள் படங்களில் வில்லனாக நடிக்கும்படி என்னிடம் கேட்டுக்கொண்டதால் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். வில்லனாக நடிப்பதில் நிறைய அழுத்தங்கள் உள்ளன.

ஹீரோவைவிட வலுவாக தெரிந்து விடக்கூடாது என்று கவனித்து நடிக்க வைப்பார்கள். வில்லனாக நான் நடித்த நிறைய காட்சிகளை நீக்கியும் இருக்கிறார்கள். இதனால் இனிமேல் வில்லனாக நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்' என்றார்.

'ஜவான்' படத்துக்கு பிறகு விஜய்சேதுபதி இந்த முடிவை எடுத்து இருப்பதால் அந்த படத்தின் கதாநாயகன் ஷாருக்கான் கொடுத்த அழுத்தம் காரணமாக இருக்குமோ என்று வலைத்தளத்தில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Sethupathi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: