பாக்கியலட்சுமி சீரியல் நடிகரின் இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் வீட்டில் விஷேசமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷபானா. தனது சிறப்பான நடிப்பு மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஷபானா, தனது இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் பின் தொடர்பவர்களை வைத்துள்ளார்.
இவருக்கும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் 'பாக்யலட்சுமி' சீரியலில் முதலில் செழியனாக நடித்த நடிகர் ஆரியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஷபானா ஆர்யனை திருமணம் செய்துகொண்டார்.
இந்தநிலையில், தற்போது ஷபானாவின் கணவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது. கையில் அழகிய குழந்தை ஒன்றை வைத்துள்ள ஆர்யன், "ஷப்பூ இங்க பாரு .. சீக்கிரம் குட்டி ஷப்பூவ லான்ச் பண்றோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு வைரலான நிலையில், ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரோ? அதனால் தான் ஆர்யன் இந்த ஸ்டோரி போட்டாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“